Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (109.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 18/12/2008
முதல் சுதந்திரப் போரை நினைவுகூறும் வகையில் புதிய துருப்பிடிக்காத 5 ரூபாய் எவர்சில்வர் நாணயங்கள்

டிசம்பர் 18, 2008

முதல் சுதந்திரப் போரை
நினைவுகூறும் வகையில்
புதிய துருப்பிடிக்காத 5 ரூபாய் எவர்சில்வர் நாணயங்கள்

முதல் சுதந்திரப் போரை நினைவுகூறும் வகையில் இந்திய அரசு வெளியிடும் புதிய துருப்பிடிக்காத 5 ரூபாய் எவர்சில்வர் நாணயங்களை,  இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது.  அந்த நாணயங்கள் பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும்.

நாணயத்தின் மதிப்பு

வடிவம் / விட்டம்

எடை

உலோக விகிதம்

ஐந்து ரூபாய்

வட்டம்.
விட்டம் 23மிமீ. பாதுகாப்பு விளிம்புகளுடன்

6 கிராம்

துருப்பிடிக்காத எவர்சில்வர்
இரும்பு      83%
குரோமியம்  17%

வடிவம்:

முன்புறம்:  அசோகா தூணின் சிங்க முகமும் அதற்குக் கீழ் ‘सत्यमेव जयते’ என்ற வாசகம் இந்தியிலும் பொறிக்கப்பட்டிருக்கும். இடது மேற்புறத்தில் ‘भारत’ என்று இந்தியிலும் வலது மேற்புறத்தில் ‘INDIA’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.   மேலும் நாணயத்தின் மதிப்பு இலக்கம் ‘5’ என்பது சர்வதேச எண் அளவில் சிங்கமுகத்திற்கு கீழ் பொறிக்கப்பட்டிருக்கும்.  இடது கீழ் புறத்தில் ‘रुपये’ என்று இந்தியிலும் வலது கீழ்புறத்தில் ‘Rupees’ என்று ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும்.

பின்புறம்:  நாணயத்தின் முகப்பில் இடதுபுறம் ஜெனரல் தாந்தியா தோப் என்பவரின் படமும் வலதுபுறம் சக்கரவர்த்தி பஹதூர் ஷா II இன் படமும் பொறிக்கப்பட்டிருக்கும்.   நடுவில் போர்க்களத்தில் வீராங்கனை ஜான்சிராணி இலக்குமிபாயின் படமும் பொறிக்கப்பட்டிருக்கும்.  இடது புறத்தில்"प्रथम स्वतंत्रता संग्राम" மற்றும் "150 वर्ष"  என்றும் இந்தியில் பொறிக்கப்பட்டிருக்கும்.  வலது புறத்தில் "THE FIRST WAR OF INDEPENDENCE" மற்றும் "150 YEARS" என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.  காலம் 1857-2007 கீழே எழுதப்பட்டிருக்கும். 

பாதுகாப்பு விளிம்புகள்:

நாணயத்தின் விளிம்பு சுற்று வட்டத்தில் பாதுகாப்பு விளிம்பாக இருக்கும்.  இரண்டு பகுதிகளுக்குமிடையே விளிம்பின் மத்தியில் அலங்கரிக்கப்பட்ட மேலீடான வரித்தடம் இருக்கும்.  அலங்கரிக்கப்பட்ட முத்துமாலையில் ஒவ்வொரு முத்துக்குமிடையில் சாய்வுக்கோடுகள் புலப்படும்.  மொத்தம் 30 முத்துகளும் 30 கோடுகளும் இருக்கும். 

1906ஆம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி இந்த நாணயம் சட்டப்படி செல்லத்தக்கது.  ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஐந்து ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கவையே.

 

அஜித் பிரசாத்
மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2008-2009/922

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்