Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (298.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 01/12/2025
தமிழ்நாடு, ஆரணி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது

01 டிசம்பர் 2025

தமிழ்நாடு, ஆரணி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி
பண அபராதம் விதிக்கிறது

நகர கூட்டுறவு வங்கிகளுக்கான ஆர்பிஐயின் “போதுமான மூலதனம் குறித்த ப்ருடென்ஷியல் விதிமுறைகள் - முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் (UCBs)”, “வெளிப்பாடு நியமங்கள், சட்டபூர்வ / இதர கட்டுப்பாடுகள் - (UCBs)” மற்றும் தங்கக் கடன் – புல்லட் ரீபேமெண்ட் - முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் (UCBs)” குறித்த வழிகாட்டுதல்களை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), நவம்பர் 27, 2025 தேதியிட்ட உத்தரவு மூலம், ஆரணி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் மீது 2.00 லட்சம் (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதித்துள்ளது.

மார்ச் 31, 2024 தேதியில் வங்கியின் நிதி நிலை அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. மேற்பார்வைக் கண்டுபிடிப்புகள் அறிக்கையை ஆய்வு செய்ததில், மேலே மேற்கோள் காட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ்வரும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், வங்கி மீது பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது:

வங்கி

  1. தனது சி.ஆர்.ஏ.ஆர் நிர்ணயிக்கபட்ட குறைந்தபட்ச அளவை விட குறைவாக இருந்தபோதிலும், அதன் உறுப்பினர்களுக்கு பங்கு மூலதனத்தை திருப்பித்தர அனுமதித்தது;

  2. தனது சி.ஆர்.ஏ.ஆர் நிர்ணயிக்கபட்ட குறைந்தபட்ச அளவை விட குறைவாக இருந்தபோதிலும், கடன் பெறுவதற்கான பங்கு இணைப்பு விதிமுறைகளுக்கு இணங்காமல் சில கடன்களை அனுமதித்தது;

  3. சில பெயரளவு உறுப்பினர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறை வரம்பை மீறி கடன்கள் வழங்கியுள்ளது மற்றும்

  4. நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறை வரம்பை மீறி புல்லட் ரீபேமெண்ட் முறையில் தங்கக் கடன்களை வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கை, ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது, வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.

(பிரிஜ் ராஜ்)       
தலைமை பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2025-2026/1600

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்