13 நவம்பர் 2025
தமிழ்நாடு, மேட்டுப்பாளையம் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் மீது இந்திய ரிசர்வ் வங்கி
பண அபராத விதிப்பு
நகர கூட்டுறவு வங்கிகளுக்கான ஆர்பிஐயின் ‘இயக்குநர்கள் குழு, உடன் இணைந்த இயக்குநர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்கள் தொடர்புள்ள நிறுவனங்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குதல்’ மற்றும் ‘வெளிப்பாடு நியமங்கள், சட்டபூர்வ / இதர கட்டுப்பாடுகள்’ வழிகாட்டுதல்களை கடைபிடிக்காததற்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), நவம்பர் 11, 2025 தேதியிட்ட உத்தரவு மூலம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் மீது ₹1.50 லட்சம் (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47A(1)(c), அதனுடன் இணைந்து படிக்கப்படும் பிரிவுகள் 46(4)(i) மற்றும் 56 ஆகியவற்றின் கீழ் ஆர்பிஐக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் விதிக்கப்பட்டது.
மார்ச் 31, 2025 தேதியில் வங்கியின் நிதி நிலை அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி சட்டபூர்வ ஆய்வு நடத்தியது. மேற்பார்வைக் கண்டுபிடிப்புகள் அறிக்கையை ஆய்வு செய்ததில், மேலே மேற்கோள் காட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக வங்கி மீது ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி அறிக்கை அனுப்பப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது பெறப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் ஆகியவற்றை பரிசீலனை செய்த போது, வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ்வரும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், பண அபராதம் விதிக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது:
வங்கி
-
இயக்குனர் தொடர்பான கடன்களை வழங்கியுள்ளது; மற்றும்
-
சில பெயரளவு உறுப்பினர்களுக்கு, ஒழுங்குமுறை விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி கடன்களை வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இது, வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடையது அல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கியால் எடுக்கப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.
(பிரிஜ் ராஜ்)
தலைமை பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு: 2025-2026/1497 |