|
02 செப்டம்பர் 2024
தமிழ்நாடு, சென்னை, ஆர்ஏஆர் பின்கேர் லிமிடெட் (RAR FINCARE
Limited) மீது இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகஸ்ட் 28, 2024 தேதியிட்ட உத்தரவின் மூலம், ஆர்ஏஆர் பின்கேர் லிமிடெட் (RAR Fincare Limited) நிறுவனத்தின் மீது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ‘முதன்மை வழிகாட்டுதல்கள் – முறைமையில் முக்கியத்துவம் இல்லாத - வைப்புகள் ஏற்காத - வங்கி சாரா நிதி நிறுவனம்- வழிகாட்டுதல்கள் (ரிசர்வ் வங்கி), 2016' மற்றும், ‘முதன்மை வழிகாட்டுதல்கள் - இந்திய ரிசர்வ் வங்கி (வங்கி அல்லாத நிதி நிறுவனம்- அளவுகோல் அடிப்படையிலான ஒழுங்குமுறைகள்), வழிகாட்டுதல்கள் 2023', இன் சில விதிகளுக்கு இணக்கமின்மை காரணமாக ₹25,000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 58G இன் துணைப்பிரிவு (1) இன் உட்பிரிவு (b) மற்றும் பிரிவு 58 B இன் துணைப்பிரிவு (5) இன் உட்பிரிவு (aa) வின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டதாகும்.
இயக்குநர்களின் நியமனம் பற்றிய தகவல் தொடர்பான கடிதங்கள் மூலம் வங்கி சாரா நிறுவனங்களின் நிர்வாகத்தில் மாற்றம் குறித்த ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு அந்நிறுவனத்தின் இணங்காமை வெளிப்படுத்தப்பட்டது. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்ற மேற்பார்வைக் கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான கடிதங்களின் அடிப்படையில், அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறியதற்காக இந்த நிறுவனத்தின் மீது ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் கூற அறிவுறுத்தி இந்த நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. மேற்கூறிய அறிக்கைக்கான இந்நிறுவனத்தின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது இந்நிறுவனம் கூறிய வாய்வழி சமர்ப்பிப்புகளின் பரிசீலனை மூலம், இந்நிறுவனம் தனது நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் விளைவாக 30 சதவீதத்திற்கும் அதிகமான தனது இயக்குனர்களில், சுயாதீன இயக்குனர்களைத் தவிர்த்து, மாற்றத்தை ஏற்படுத்த முன்னதாகவே ரிசர்வ் வங்கியின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறத் தவறிய காரணத்தால் பண அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்துடனானதல்ல. மேலும், இந்த பண அபராதம் விதிக்கப்படுவது, இந்நிறுவனத்திற்கு எதிராக ரிசர்வ் வங்கியால் எடுக்கப்ப்படும் வேறு எந்த நடவடிக்கைக்கும் பாரபட்சம் இல்லாமல் இருக்கும்.
(புனீத் பஞ்சோலி)
தலைமை பொது மேலாளர்
பத்திரிகை வெளியீடு: 2024-2025/1024 |