Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (213.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/12/2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் – கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (மகாராஷ்டிரா)

டிசம்பர் 15, 2020

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன்
இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு
உத்தரவுகள் – கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட்
(மகாராஷ்டிரா)

இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 15, 2020 தேதியிட்ட DoS.CO.UCBs-West/D-1/12.07.157/2019-20 உத்தரவின் படி கர்நாலா நகரி சகாகரி பாங்க் லிமிடெட், பன்வேல், ராய்காட் (மகாராஷ்டிரா) வங்கியை ஜூன் 15, 2020 அன்று வணிக முடிவில் இருந்து ஆறு மாத காலத்திற்கு வழிமுறைகளின் கீழ் வைத்தது.

2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கூறிய வழிகாட்டுதல் உத்தரவு ஜனவரி 29, 2020 தேதியிட்ட DOR.CO.AID.No.D-53/12.22.111/2019-20 உத்தரவின் படி மறு ஆய்வுக்கு உட்பட்டு ஜூன் 15, 2021 வரை நீட்டிக்கப்படுகிறது என்பதைப் பொதுமக்களின் தகவல்களுக்கு அறிவிக்கிறது.

3. பார்வையில் கண்ட உத்தரவின் மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் டிசம்பர் 14, 2020 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

4. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.

(யோகேஷ் தயால்)     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/775

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்