Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (206.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/04/2020
ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை (டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது

ஏப்ரல் 15, 2020

ரிசர்வ் வங்கி நான்காவது இலக்கு நீண்ட கால ரெப்போ செயல்பாட்டை
(டி.எல்.டி.ஆர்.ஓ) அறிவிக்கிறது

மார்ச் 27, 2020 அன்று வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகளின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, ரிசர்வ் வங்கி மூன்று வருட காலத்துக்கு பொருத்தமான அளவுகளில் மொத்தமாக 1,00,000 கோடி ரூபாய் வரை டி.எல்.டி.ஆர்.ஓ – க்களை நடத்தும். இதுவரை, ரூ. 75,000 கோடிக்கு டி.எல்.டி.ஆர்.ஓ – க்கள் மூன்று தவணைகளில் நடத்தப்பட்டுள்ளன. இப்போது ரூ. 25,000 கோடிக்கு மற்றொரு டி.எல்.டி.ஆர்.ஓ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. செயல்பாட்டின் விவரங்கள் பின்வருமாறு:

வ. எண் செயல்பாடு நாள் அறிவிக்கப்பட்ட தொகை
(ரூபாய் கோடியில்)
காலம் சாளர நேரம் திரும்பியளிக்கும் தேதி
1. ஏப்ரல் 17, 2020 25,000 3 வருடம் 10:30 AM 11:30 AM ஏப்ரல் 13, 2023

2. டி.எல்.டி.ஆர்.ஓ வின் இந்த தவணையின் கீழ் பெறப்பட்ட நிதி, தவணை செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.

3. டி.எல்.டி.ஆர்.ஓ -இன் கீழ் பெறப்பட்ட ஒதுக்கீட்டில் இருந்து ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நிறுவனங்களின் குழு வழங்கிய பத்திரங்களில் ஒரு குறிப்பிட்ட வங்கி முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை 10 சதவீதமாக இருக்கும்.

4. மார்ச் 27, 2020 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் பத்திரிக்கை வெளியீடு 2019-2020/2131 இல் கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து செயல்பாட்டு வழிகாட்டுதல்களும் மாறாமல் இருக்கும்.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/2219

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்