Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (234.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/09/2020
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகள் –காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா – கால நீட்டிப்பு

செப்டம்பர் 08, 2020

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன்
இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டு
உத்தரவுகள் –காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா – கால
நீட்டிப்பு

காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா, நவம்பர் 07, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-4/12.22.126/2017-18 உத்தரவுகளின் படி, நவம்பர் 09, 2017 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டுக் கடைசியாக ஜூன் 03, 2020 தேதியிட்ட DCBR.CO.AID/No.D84/12.22.126/2019-20 உத்தரவின்படி, மதிப்பாய்வுக்கு உட்பட்டு செப்டெம்பர் 09, 2020 வரை நீட்டிக்கப்பட்டது.

2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (கூட்டுறவுச் சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, காரட் ஜனதா சகாகரி பாங்க் லிமிடெட், காரட், மகாராஷ்டிரா, வங்கிக்கு வழங்கிய நவம்பர் 07, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-4/12.22.126/2017-18 உத்தரவின் செல்லுபடி காலத்தை அவ்வபோது மாற்றியமைத்து, கடைசியாக செப்டம்பர் 09, 2020 வரை நீட்டித்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 03, 2020 தேதியிட்ட DOR.CO.AID/No.D-19/12.22.126/2020-21 உத்தரவின்படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு செப்டம்பர் 10, 2020 முதல் டிசம்பர் 09, 2020 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கிறது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.

3. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.

4. மேற்கண்ட கால நீட்டிப்பை அறிவிக்கும் செப்டம்பர் 03, 2020 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

5. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய கால நீட்டிப்பு மற்றும் / அல்லது திருத்தங்களால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளதைக் குறிக்காது.

(யோகேஷ் தயால்)     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2020-2021/300

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்