Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (190.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/11/2019
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சிகார் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், சிகார், ராஜஸ்தான் – செல்லுபடி கால நீட்டிப்பு

நவம்பர் 8, 2019

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A
உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - சிகார் அர்பன்
கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், சிகார், ராஜஸ்தான் – செல்லுபடி கால நீட்டிப்பு

சிகார் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், சிகார், ராஜஸ்தான், அக்டோபர் 26, 2018 தேதியிட்ட உத்தரவின்படி நவம்பர் 09, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு மறுஆய்வுக்கு உட்பட்டு, வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. உத்தரவுகளின் செல்லுபடியாகும் காலம் கடைசியாக மே 2, 2019 தேதியிட்ட உத்தரவின் படி மதிப்பாய்வுக்கு உட்பட்டு நவம்பர் 9,2019 வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின்(ஏஏசிஎஸ்) பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட அக்டோபர் 26, 2018 தேதியிட்ட உத்தரவின் செல்லுபடி காலம் ஏற்கனவே நவம்பர் 09, 2019 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 30, 2019 தேதியிட்ட உத்தரவின்படி, மதிப்பாய்வுக்கு உட்பட்டு நவம்பர் 10, 2019 முதல் மே 09,2020 மேலும் ஆறுமாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொது மக்களின் தகவலுக்காக தெரிவிக்கிறது.

வழிகாட்டுதல்களின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். கால நீட்டிப்பை அறிவிக்கும் அக்டோபர் 30, 2019 தேதியிட்ட மேற்கண்ட உத்தரவின் நகல், பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். மேற்கண்ட வழிகாட்டு உத்தரவுகளை ஆர்பிஐ வழங்கியுள்ளதால், வங்கியின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்வதாகக் கருதக்கூடாது.

வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வங்கி வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும். ரிசர்வ் வங்கி சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த உத்தரவுகளில் மாற்றங்களைப் பரிசீலிக்கலாம்.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1146

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்