Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (200.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 25/10/2019
இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் பாங்க் லிமிடெட் மீது பண அபராதம் விதிக்கிறது

அக்டோபர் 25, 2019

இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் பாங்க் லிமிடெட் மீது பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அக்டோபர் 24, 2019 தேதியிட்ட உத்தரவின்படி தமிழ் நாடு மெர்கன்டைல் பாங்க் லிமிடெட் (தி பாங்க்)க்கு, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் 2016 (FI மற்றும் வணிக வங்கிகளால் மோசடிகளின் வகைப்பாடு மற்றும் புகாரளித்தல்) இன் கீழ் உள்ள சில விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக ரூ. 35 லட்சம் (ரூபாய் முப்பத்தைந்து லட்சம்) பண அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம்,1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவு 46 (4) (I) பிரிவின் கீழ் ஆர்பிஐ க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது, மற்றும் வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் கைஎழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் தன்மையை பாதிக்கும் நோக்கில் அல்ல.

பின்னணி

மார்ச் 31, 2017 நிலவரப்படி வங்கியின் நிதி நிலை குறித்த சட்டரீதியான மேற்பார்வையில், “இந்திய ரிசர்வ் வங்கி (வணிக வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட FI ளால் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல்) உத்தரவுகள் 2016” இல் ஆர்பிஐ வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றாதது தெரியவந்தது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், உத்தரவுகளை பின்பற்றாததற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வங்கிக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில் செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்ட பிறகு, மேற்கூறியவற்றை வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக பண அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.

(யோகேஷ் தயால்)     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1038

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்