Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (201.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 23/10/2019
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள் – பாக்யோதயா ஃபிரண்ட்ஸ் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் வாருட், மாவட்டம் அமராவதி, மகாராஷ்ட்ரா – கால நீட்டிப்பு

அக்டோபர் 23, 2019

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன்
கீழ் வழிகாட்டு உத்தரவுகள் – பாக்யோதயா ஃபிரண்ட்ஸ் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க்
லிமிடெட் வாருட், மாவட்டம் அமராவதி, மகாராஷ்ட்ரா – கால நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, பாக்யோதயா ஃபிரண்ட்ஸ் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் வாருட், மாவட்டம் அமராவதி, மகாராஷ்ட்ராக்கு, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A உட்பிரிவு (1) உடன் இணைந்தப் பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனவரி 17, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளை வழங்கியது. தற்போது, ரிசர்வ் வங்கி, இந்த உத்தரவுகளை, அக்டோபர் 18, 2019 முதல் ஏப்ரல் 17, 2020 வரை ஆறு மாத காலத்திற்கு மதிப்பாய்வுக்கு உட்பட்டு நீட்டித்துள்ளது. இந்த உத்தரவுகள் பணம் அடுப்பது/பெறுவது குறித்த சிலக் கட்டுப்பாடுகள் மற்றும்/அல்லது உச்ச வரம்பை விதிக்கிறது. இந்த உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். ரிசர்வ் வங்கி சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த உத்தரவுகளில் மாற்றங்களைப் பரிசீலிக்கலாம். ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளை வழங்கியுள்ளதால் மேற்கண்ட வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதிநிலை முன்னேறும் வரை வங்கி வர்த்தகங்களை கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்திடும்.

யோகேஷ் தயால்     
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1011

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்