Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (188.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 14/10/2019
இந்திய ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் பாங்க் லிமிடெட் மீது பண அபராதம் விதிக்கிறது

அக்டோபர் 14, 2019

இந்திய ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் பாங்க் லிமிடெட் மீது பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ), அக்டோபர் 14, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், லட்சுமி விலாஸ் பாங்க் லிமிடெட் (தி பாங்க்) க்கு "வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு (ஐஆர்ஏசி) விதிமுறைகள்" தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததற்காக ரூ. 1 கோடி பண அபராதம் விதித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (i) உடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) விதிகளின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்தியுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கில் அல்ல.

பின்னணி

ஆர்பிஐ மார்ச் 31, 2017 அன்று நடத்திய வங்கியின் நிதி நிலை குறித்த ஆய்வில் “வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு (ஐஆர்ஏசி)” பற்றி ஆர்பிஐ வழங்கிய உத்தரவுகளை கடைபிடிக்க தவறியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மேற்கண்ட உத்தரவுகளுக்கு இணங்காத்ததற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்ற காரணத்தை வழங்குமாறு அறிவுறுத்தி வங்கிக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பிற்கு வங்கி அளித்த பதில், தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் பின்னர் வங்கி அளித்த கூடுதல் சமர்ப்பிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னர், மேற்கூறிய உத்தரவுகளை கடைப்பிடிக்காததற்காக பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.

யோகேஷ் தயால்      
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/940

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்