Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (199.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 02/08/2019
இந்திய ரிசர்வ் வங்கி ஏழு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கிறது

ஆகஸ்ட் 02, 2019

இந்திய ரிசர்வ் வங்கி ஏழு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ), ஜூலை 31, 2019 தேதியிட்ட உத்தரவின் படி, ஏழு வங்கிகளுக்கு, “நடப்புக் கணக்குகளை துவக்குதல் மற்றும் செயல்படுத்துதலுக்கான நடத்தை விதிகள்” “வங்கிகளில் நடப்புக் கணக்குகளைத் துவக்குதல் – ஒழுங்குமுறைகளின் தேவை”, “வங்கிகளால் பில்களை தள்ளுபடி செய்தல் / மறுவிற்பனை செய்தல்”, “இந்திய ரிசர்வ் வங்கி (வணிக வங்கிகளால் மோசடி வகைப்பாடு மற்றும் அறிக்கையிடல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எஃப்ஐக்கள்) உத்தரவுகள் 2016”, “நிதிகளின் இறுதி பயன்பாடு - கண்காணிப்பு” மற்றும் “இருப்புநிலை தேதியில் வைப்பு” ஆகிய வழிகாட்டுதல்களுக்கு இணங்காத்ததற்காக பண அபராதம் விதித்துள்ளது. அபராதத்தின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி:

வரிசை எண் வங்கியின் பெயர் அபராதத் தொகை
(ரூ. கோடியில்)
1 அலகாபாத் பாங்க் 2.0
2 பாங்க் ஆஃப் பரோடா 1.5
3 பாங்க் ஆப் இந்தியா 1.5
4 பாங்க் ஆப் மகாராஷ்டிரா 2.0
5 இந்தியன் ஓவர்ஸீஸ் பாங்க் 1.5
6 ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் 1.0
7 யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா 1.5

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் 46 (4) (i) மற்றும் 51 (1) பிரிவுகளுடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) விதிகளின் கீழ் ஆர்பிஐ க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆர்பிஐ வழங்கிய மேற்கண்ட வழிமுறைகளை வங்கிகள் பின்பற்றத் தவறியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.

பின்னணி

ஒரு குழு நிறுவனங்களின் கணக்குகளில் ஆர்பிஐ யால் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளபடி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்பிஐ வழங்கிய வழிமுறைகளின் விதிகளை வங்கிகள் பின்பற்றத் தவறிவிட்டன என்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், வழிகாட்டு உத்தரவுகளை பின்பற்றாததற்காக ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணங்களைக் காட்டுமாறு வங்கிகளுக்கு காரண விளக்க அறிவிப்பு வழங்கப்பட்டது. வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட பதில்கள், தனிப்பட்ட விசாரணையில் செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள், கூடுதல் சமர்ப்பிப்புகளை ஆராய்வது, ஏதேனும் இருந்தால், ஆகியவற்றை கருத்தில் கொண்டபின், ஆர்பிஐ உத்தரவுகளைக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் மேற்கூறிய ஏழு வங்கிகளும் வழிகாட்டு உத்தரவுகளை மீறிய வரம்பைப் பொறுத்து பண அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/321

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்