Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (228.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/07/2019
இந்திய ரிசர்வ் வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு பண அபராதம் விதிக்கிறது

ஜூலை 15, 2019

இந்திய ரிசர்வ் வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஜூலை 15, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு (தி பாங்க்) ரூபாய் 70 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது (i) வருமானம் குறித்து வெளியிட்டுள்ள அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு (ஐஆர்ஏசி) விதிமுறைகள் (ii) நடப்புக் கணக்குகளைத் துவக்குவதற்கும் இயக்குவதற்கும் நடத்தை விதிமுறை மற்றும் பெரிய வரவுகளைப் பற்றிய மத்திய தகவல் களஞ்சியத்தில் (சிஆர்ஐஎல்சி) தரவைப் புகாரளித்தல், மற்றும் (iii) மோசடி இடர் மேலாண்மை மற்றும் வகைப்பாடு மற்றும் மோசடிகளின் அறிக்கை ஆகிய விதிமுறைகளை மீறியதற்காக 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (தி ஆக்ட்) 46 (4) (i) மற்றும் 51 (1) பிரிவுகளுடன் இணைந்த 47 A (1) (c) பிரிவுகளின் கீழ் ஆர்பிஐ யில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.

பின்னணி

மார்ச் 31, 2017 நிலவரப்படி வங்கியின் சட்டபூர்வமான ஆய்வில், ஐஆர்ஏசி விதிமுறைகள் குறித்து ஆர்பிஐ வெளியிட்டுள்ள உத்தரவுகள், வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களை மற்ற வங்கிகளுடன் பகிர்ந்து கொள்வது, சிஆர்ஐஎல்சி-இல் தரவுகளை தாக்கல் செய்வது மோசடி இடர் மேலாண்மை, மற்றும் மோசடிகளின் வகைப்பாடு மற்றும் அறிக்கை ஆகிய அறிவுறுத்தல்களுக்கு இணங்கவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆய்வு அறிக்கை மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களின் அடிப்படையில், ஆர்பிஐ வழங்கிய உத்தரவுகளுக்கு இணங்காததற்காக ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு ஒரு அறிவிப்பு வழங்கப்பட்டது. வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் வாய்வழி சமர்ப்பிப்புகளை பரிசீலித்தபின், ஆர்பிஐ உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்தது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/154

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்