Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (188.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 12/07/2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் - யுனைடெட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பாக்னன், மேற்கு வங்கம் - கால நீட்டிப்பு

ஜூலை 12, 2019

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பிரிவு 35 A இன் கீழ் உத்தரவுகள் - யுனைடெட்
கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பாக்னன், மேற்கு வங்கம் - கால நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, யுனைடெட் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பாக்னன் ஸ்டேஷன் ரோடு (நார்த்), பி.ஓ.-பக்னான், மாவட்டம்-ஹவுரா, பின் -711 303, மேற்கு வங்கத்துக்கு 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் தனது அதிகாரங்களை பயன்படுத்தி உத்தரவுகளை வெளியிட்டது. அதில், ஜூலை 18, 2018 அன்று வர்த்தக முடிவில் இருந்து, அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக ஜூலை 18, 2019 வரை நீட்டிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி இப்போது, பொது நலன் கருதி, ஜூலை 19, 2019 முதல் அக்டோபர் 18, 2019 வரை மூன்று மாதங்களுக்கு வழிகாட்டுதல்களை மேலும் நீட்டித்துள்ளது. பொதுமக்களின் ஆய்வுக்காக உத்தரவின் நகல் வங்கியின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட உத்தரவுகளின் வெளியீட்டினால் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதிநிலை மேம்படும் வரை வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும். இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த உத்தரவுகளில் மாற்றங்களை பரிசீலிக்கலாம்.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/139

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்