Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (211.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 10/05/2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - மில்லத் அர்பன் பாங்க் லிமிடெட், தாவங்கேர் மாவட்டம், கர்நாடகா

தேதி: மே 10, 2019

வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள
வழிகாட்டுதல்கள் - மில்லத் அர்பன் பாங்க் லிமிடெட், தாவங்கேர் மாவட்டம், கர்நாடகா

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ், பிரிவு 56 உடன் (AACs) உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கர்நாடகாவின் தாவங்கேர் மாவட்டம் மில்லத் அர்பன் பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கிசில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, மே 08, 2019 அன்று வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், மேற்கூறிய வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக முன் ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு கடனையும் வழங்க முடியாது அல்லது புதுப்பிக்க முடியாது, எந்தவொரு முதலீடு செய்வதோ, நிதிகளின் மீது கடன் மற்றும் புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், செலவு செய்தல் அல்லது ஏதேனும் கட்டணம் செலுத்துதல், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது வேறு எந்தவொரு சமரச உடன்படிக்கைகள், சொத்துக்களை விற்றல், மாற்றல் ஆகியவற்றை ஏப்ரல் 26, 2019 தேதியிட்ட வங்கியின் வளாகத்தில் ஆர்வமுள்ள உறுப்பினர்களால் பரிசீலிக்க நகல் வைக்கப்பட்டுள்ள, இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளபடியன்றி, மேற்கொள்ள முடியாது.

மேலும், ஒவ்வொரு சேமிப்பு வங்கி அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த டெபாசிட் கணக்கிலும் உள்ள மொத்த நிலுவைத் தொகையை 1000 (ரூபாய்க்கு மட்டும்) மிகாத தொகையை ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வங்கி அதன் வைப்பாளர்களை திரும்பப் பெற அனுமதிக்க முடியும்.

இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு வங்கி, தனது வர்த்தகத்தைத் தொடர்ந்திடும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம்.

ஷைலஜா சிங்
துணைப் பொது மேலாளர்

செய்தி வெளியீடு: 2018-2019/2650

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்