Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (241.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 13/02/2019
இந்திய ரிசர்வ் வங்கி நான்கு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கிறது

தேதி: பிப்ரவரி 13, 2019

இந்திய ரிசர்வ் வங்கி நான்கு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31, 2019 தேதியிட்ட உத்தரவுகளின் மூலம் நிதிகளின் இறுதிப் பயன்பாட்டைக் கண்காணித்தல், பிற வங்கிகளுடன் தகவல் பரிமாற்றம், மோசடிகளை வகைப்படுத்துதல் மற்றும் புகாரளித்தல் மற்றும் கணக்குகளை மறுசீரமைத்தல் ஆகியவற்றில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பல்வேறு வழிமுறைகளுக்கு இணங்காததற்காக, கீழே விவரிக்கப்பட்டுள்ள நான்கு வங்கிகளுக்கு பண அபராதம் விதித்துள்ளது

வரிசை எண் வங்கியின் பெயர் அபராதத் தொகை
(₹ மில்லியனில்)
1. பாங்க் ஆப் பரோடா 10
2. கார்ப்பரேஷன் வங்கி 20
3. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 10
4. யூனியன் பாங்க் ஆப் இந்தியா 10

1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46(4)(i) உடன் இணைந்த பிரிவு 47ஏ(1)(c) விதிகளின் கீழ் ரிசர்வ் வங்கியில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கூறிய வங்கிகள் ரிசர்வ் வங்கி வழங்கிய மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாததைக் கருத்தில் கொண்டு.இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.

அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்

செய்தி வெளியீடு: 2018-2019/1930

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்