Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (258.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 20/04/2018
இந்திய ரிசர்வ் வங்கி, தி பிஜ் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட்,
கேதா மாவட்டம் (குஜராத்) (அட்டவணையில் இல்லாத நகர
கூட்டுறவு வங்கி) மீது அபராதம் விதிக்கிறது

ஏப்ரல் 20, 2018

இந்திய ரிசர்வ் வங்கி, தி பிஜ் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட்,
கேதா மாவட்டம் (குஜராத்) (அட்டவணையில் இல்லாத நகர
கூட்டுறவு வங்கி) மீது அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, தி பிஜ் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட், கேதா மாவட்டம் (குஜராத்) (அட்டவணையில் இல்லாத நகர கூட்டுறவு வங்கி) மீது ரூ.4,00,000 (ரூபாய் நான்கு லட்சம் மட்டும்) பண அபராதத்தை விதிக்கிறது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (AACs கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (b) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, பின்வரும் காரணங்களுக்காக இந்த அபராதத்தை விதிக்கிறது. மேற்பார்வையாளர் நடவடிக்கை கட்டமைப்பின் (SAF) கீழ் அறிவுறுத்தப்பட்டுள்ள ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறியதற்காகவும், தனிப்பட்ட வாடிக்கையாளர் அடையாள கோடு (UCIC) வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்காததற்காகவும், பரிவர்த்தனைகளின் நேரிடர் அடிப்படையில் வகைப்படுத்தி, பரிவர்த்தனைகள் வாடிக்கையாளரின் சுயவிபரங்களோடு பொருந்தாத வகையில் நடைபெறும்போது எச்சரிக்கைகளை அளிக்கும் வகையில் ஒரு முறைமையை ஏற்படுத்தாதற்காகவும், உங்கள் வாடிக்கையாளர்களை அறிதல் (KYC) மற்றும் பணச் சலவைக்கெதிரான (AML) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ரொக்க பரிவர்த்தனைகளில் ரூ. 10.00 லட்சத்திற்கும் அதிகமானவற்றை பதிவு செய்யாமலும், அவை குறித்த விவரங்களை நிதி நுண்ணறிவு பிரிவு - இந்தியாவிற்கு (FIU-IND) தெரிவிக்காமல் இருந்ததற்காகவும் மேற்படி வங்கியின் மீது இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.

மார்ச் 31, 2016 ஆம் ஆண்டின் நிதி நிலைக்கான ஆய்வின் முடிவில் இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரி வங்கிக்கு அறிவிப்பினை அனுப்பியது. வங்கி எழுத்து மூலம் பதிலை சமர்ப்பித்தது. மற்றும் அகமதாபாத், இந்திய ரிசர்வ் வங்கியில் மூத்த அலுவலர்கள் குழுவிற்கு நேரில் தனிப்பட்ட பதிலையும் அளித்தது. இவற்றைக் கருத்தில் கொண்டு வங்கியின் அத்துமீறல்கள் நிரூபணமானதால், அதற்கு அபராதம் தேவையென இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு - 2017-2018/2789

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்