Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (44.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 18/04/2007
இந்தியாவில் இயங்கிவரும் தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கான பாதுகாப்பான வெளியிடும் திட்டத்தினை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது.

ஏப்ரல் 18, 2007

 

 

இந்தியாவில் இயங்கிவரும் தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கான

பாதுகாப்பான வெளியிடும் திட்டத்தினை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது

 

 

இந்தியாவில் இயங்கிவரும் தனியார் மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்கான பாதுகாப்பான வெளியிடும் திட்டத்தினை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது. இது குறித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் www.rbi.org. ல் காணக் கிடைக்கும் பொதுத்துறை வங்கிகள் மற்றும் மத்திய அரசின் சட்டத்தால் நிறுவப்பட்ட அமைப்பாதலால் ரிசர்வ் வங்கியும் இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் குடைக்கீழ் கொண்டு வரப்படுகின்றன.

இந்திய அரசின் ஏப்ரல் 21, 2004ம் தேதியிட்ட தீர்மானத்தின் கருத்தின் அடிப்படையில் இந்தியாவில் இயங்கிவரும் தனியார் துறை மற்றும் அயல் நாட்டு வங்கிகளுக்கான முன்குறிப்பிட்ட திட்டம் உருவாக்கப்பட்டது. இந்திய அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் மத்திய அரசின் சட்டத்தின்கீழ் உருவாக்கப்படும், நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள், அரசுக்குழுமங்கள், வட்டார ஆட்சிமுறை அலுவலகங்கள், கூட்டுறவுக் குழுமங்கள் இவற்றில் பணிபுரியும் எந்தவொரு நபரின்மீதும் லஞ்ச ஊழல் புகார், பணியதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கான குற்றச்சாட்டு இவைகள் குறித்து எழுத்து வடிவில் அளிக்கப்படும் புகார்கள் கோரப்படும் தகவல்களின் அறிவிப்பு, இவை குறித்த விண்ணப்பங்களை வாங்கி அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை  லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு மேற்குறிப்பிட்ட அரசின் தீர்மானம் வழங்கியுள்ளது.

நிதிநிலை ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி ஆதரவளிக்கும் வகையிலும் நிதித்துறையில் பொதுமக்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் விதத்திலும் ‘தனியார் துறை வங்கிகள் மற்றும் அயல்நாட்டு வங்கிகளுக்’கான ‘பாதுகாப்பான வெளியிடும்’ திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த விழைகிறது.  முன்மொழியவிருக்கும் இத்திட்டத்தின் வடிவம் ரிசர்வ் வங்கியின் இணைய தளத்தில் ஜனவரி 25, 2006ல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன் மீதான கருத்துக்கள், தொடர்புடைய அனைவரிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன.  அந்த கருத்துக்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இத்திட்டம் முடிவான வடிவம் பெற்று உடனடி செயலாக்கத்திற்கும் அளிக்கப்படுகிறது.

 

 

பத்திரிக்கை வெளியீடு 2006-2007/1423

 

  அல்பனா கில்லாவாலா

தலைமைப் பொது மேலாளர்.

 

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்