Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (265.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 13/12/2017
இந்திய ரிசர்வ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி லிமிடெட் வங்கியின் மீது பண அபராதம் விதிக்கிறது

டிசம்பர் 13, 2017

இந்திய ரிசர்வ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி லிமிடெட்
வங்கியின் மீது பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி ஸிமிடெட் வங்கியின் மீது, டிசம்பர் 12, 2017 அன்று, ரிசர்வ் வங்கி வழங்கிய நிதிசாரா அடிப்படையிலான சேவைகளுக்கான வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை பின் பற்றாத காரணத்துக்காக வங்கிக்கு ரூ. 30 மில்லியன் பண அபராதத்தை விதிக்கிறது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் சட்டப் பிரிவு எண் 47A (1) (c) (உடன் இணைந்த பிரிவு 46 (4) (i))-ன்படி, வங்கியால் வழங்கப்பட்ட சில வழிகாட்டுதல் / அறிவுறுத்தல்களை செயல்படுத்த தவறியதால், இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பண அபராதத்தை விதிக்கிறது.

இந்த நடவடிக்கை, கட்டுப்பாட்டு விதிகளைக் கடைபிடிப்பதிலுள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர எந்தவொரு பரிவர்த்தனையின் செல்லுபடியை, அல்லது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை பாதிக்கும் நோக்கத்தோடு அல்ல.

பின்புலம்

இந்த வங்கியின் நிதியியல் நிலைமையைப் பற்றி, ரிசர்வ் வங்கியின் சட்டரீதியான ஆய்வு மார்ச் 31, 2016-ல் மேற்கொண்டபோது, ரிசர்வ் வங்கியின் செயல்படாத சொத்துக்கள் மதிப்பீடு மற்றும் நிதிசாரா அடிப்படையிலான சேவைகளை வழங்குவதில் பல்வேறு ஒழுங்குமுறைகளை மீறியது தெளிவானது. ஆய்வறிக்கை மற்றும் தொடர்புடைய ஆவணங்களை மீளாய்வு செய்ததன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதால் ஏன் தண்டனையை விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பு ஆகஸ்டு 10, 2017 அன்று வழங்கப்பட்டது.

விசாரணையின் முழு உண்மைகளையும், தனிப்பட்ட விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள், நிறுவனத்தின் பதில்களையும் பரிசீலித்தபின், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்/ வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மேற்கூறிய விதிமீறல் குறித்த குற்றச்சாட்டு நிரூபணமானது என்று முடிவு செய்து அபராதம் விதிப்பதற்கான தேவையை RBI உறுதி செய்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1617

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்