Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (224.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 20/04/2017
இந்திய ரிசர்வ் வங்கி பேங்க் ஆஃப் கயானாவுடன், “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது

ஏப்ரல் 20, 2017

இந்திய ரிசர்வ் வங்கி பேங்க் ஆஃப் கயானாவுடன்,
“மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்றம்” ஆகியவற்றிற்காக,
ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது

இந்திய ரிசர்வ் வங்கி, “மேற்பார்வை ஒத்துழைப்பு மற்றும் மேற்பார்வைத் தகவல் பரிமாற்ற” த்திற்காக பேங்க் ஆஃப் கயானாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU), கையெழுத்திட்டுள்ளது.

பேங்க் ஆஃப் கயானாவின் ஆளுநர் முனைவர் கோபிந் N. கங்கா, அவர்களும், இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக, வங்கியின் ஆளுநர் முனைவர் உர்ஜித் R. படேல் அவர்களும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேற்பார்வைத் தகவலைப் பகிர்ந்திடவும், அதிக அளவில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், சில நாடுகளின் மேற்பார்வைத் துறையினரிடையே, ஒத்துழைப்பை அதிகரிக்கவும் மற்றும் மேற்பார்வை பற்றிய தகவல் பரிமாற்றத்திற்காகவும், இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் மேற்பார்வைத் துறையில் ஒத்துழைப்புக்கான கடிதம் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் சேர்த்து, இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 40 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ஒரு மேற்பார்வை ஒத்துழைப்பிற்கான கடிதம் மற்றும் ஒரு ஒத்துழைப்பு அறிக்கை ஆகியவற்றைச் செய்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2016-2017/2842

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்