Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (213.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/12/2016
மத்திய நிர்வாக மன்றக் குழுவின் 562-வது கூட்டம்

டிசம்பர் 15, 2016

மத்திய நிர்வாக மன்றக் குழுவின் 562-வது கூட்டம்

டிசம்பர் 15, 2016 வியாழக் கிழமை அன்று இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய நிர்வாக மன்றக்குழுவின் 562-வது கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் டாக்டர் உர்ஜித் R. படேல் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இணை ஆளுநர்கள் திரு. R. காந்தி, திரு.S.S.முந்த்ரா மற்றும் திரு N.S.விஸ்வநாதன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தவிரவும் திரு. நடராஜன் சந்திரசேகரன், திரு.பரத் தோஷி, திரு. சுதிர் மன்கட் போன்ற மத்திய மன்ற இயக்குநர்களும் உடன் இருந்தனர். அரசாங்க நியமன இயக்குநரான திருமதி அஞ்சலி சிப் துகல், (செயலாளர், நிதிச்சேவைகள் துறை, நிதி அமைச்சகம்) உடன் இருந்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, சர்வதேச மற்றும் உள்நாட்டிலுள்ள சவால்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட சில செயல்பாடுகள் ஆகியவற்றை மத்திய நிர்வாக மன்றக் குழு மறு ஆய்வு செய்தது.

பின்னர், ஆளுநர் மேற்குவங்க முதல்வரை சந்தித்து, அந்த பிராந்தியத்திற்குரிய சில பிரத்யேக பிரச்சனைகள் குறித்து அவருடன் விவாதித்தார்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016–17/1539

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்