Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (95.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/11/2016
ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் தகுதிநிலையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுகின்றன. – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நவம்பர் 08, 2016

ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் தகுதிநிலையிலிருந்து
விலக்கிக் கொள்ளப்படுகின்றன. – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியால் நவம்பர் 08, 2016 வரை வெளியிடப்பட்டு வந்த மகாத்மா காந்தி வரிசை நோட்டுகளில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 மதிப்பிலக்க ரூபாய் நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையை இந்திய அரசாங்கம் எண் 2652 நவம்பர் 08, 2016 தேதியிட்ட அறிவிக்கை மூலம் விலக்கிக் கொண்டது..

கள்ள நோட்டுகள் பிரச்சினையை எதிர்கொள்ளவும், கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்படுவதை ஒழிக்கவும், கள்ளநோட்டுகள் மூலம் தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுவதை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அத்தியாவசியமானதாக ஆகிவிட்டது.

நவம்பர் 10, 2016 முதல், இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள், குழுமங்கள், வர்த்தக நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள் அவற்றை இந்திய ரிசர்வ் வங்கியின் ஏதாவது ஒரு அலுவலகத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது எந்தவொரு வங்கிக்கிளையிலாவது கொடுத்து அதன் மதிப்பினை அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக்கொள்ளலாம்.

உடனடிப் பணத்தேவைக்கு, இந்த வங்கிக் கிளைகளின் முகப்புகளில் ஒரு நபருக்கு

ரூ. 4,000 வரை இந்த நோட்டுகளைக் கொடுத்து பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

இவ்வாறு பணத்தை மாற்றிக்கொள்ளும் வசதியைப் பெற அவரவரின் அடையாளச் சான்றாவண அட்டையைக் காண்பிக்கவேண்டும்.

இவ்வாறு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை எந்தவிதத் தடையுமின்றி, காசோலை வழங்கவோ, மின்னணு நிதிமாற்றம் (உ-ம். NEFT, RTGS, IMPS, மொபைல் பேங்கிங், இணையதள வங்கிப் பணமாற்றம்) செய்யவோ பயன்படுத்திக்கொள்ளலாம். நவம்பர் 09, 2016 முதல் நவம்பர் 24, 2016 (வேலைநேரம் முடியும் வரை) வரையுள்ள காலகட்டத்தில் மட்டும், பணமாகக் கணக்கிலிருந்து எடுப்பதற்கு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ. 10,000 வரை, ஒட்டு மொத்தமாக ஒரு வாரத்திற்கு ரூ. 20,000 வரை மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து ஒருவர் வங்கி முகப்பில் எடுக்கமுடியும். இந்த வரம்புகள் பின்னர் மறு பரிசீலனை செய்யப்படும்.

அனைத்து தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் (ATMs) மற்ற பண வழங்கி எந்திரங்கள் கணக்கீட்டுக் கூறுகளை மாற்றும் பொருட்டு, நவம்பர் 09, 2016 அன்று மூடப்பட்டிருக்கும். தயார்நிலை அடைந்ததும், அவைகள் செயல்படத்தொடங்கி, நவம்பர் 18, 2016 வரை ஒரு நாளைக்கு ஒரு அட்டைக்கு ரூ. 2,000 வரை பணம் வழங்கப்படும். அது பின்னர் நவம்பர் 19, 2016 முதல் வரம்புத் தொகை ரூ. 4,000 ஆக உயர்த்தப்படும்.

டிசம்பர் 30, 2016-அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, இவ்வாறு இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யவோ அல்லது பணமாக மாற்றிக் கொள்ளவோ ஒருவரால் முடியாது போனால், இந்திய ரிசர்வ் வங்கியால் பின்னர் அறிவிக்கப்படும் தேதிவரை, இந்திய ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட அலுவலகங்களில் இதற்கான வசதி செய்து தரப்படும் அல்லது ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்.

மேலும் இது குறித்து விவரங்கள், விளக்கங்கள் பெற, பொதுமக்கள் www.rbi.org.in என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளம் அல்லது www.finmin.nic.in என்ற இந்திய அரசின் இணையதளத்தை அணுகலாம்.

அல்பனா கில்லவாலா
முதன்மை ஆலோசகர்

பத்திரிகை வெளியீடு - 2016-2017 /1142

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்