Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (314.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 09/09/2015
இந்திய ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா, நண்டூர்பார் ஸ்ரீ கோவர்தன்சிங்ஜி ரகுவன்ஷி சஹகாரி வங்கி லிமிடெட்டுக்கு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது

செப்டம்பர் 9, 2015

இந்திய ரிசர்வ் வங்கி, மஹாராஷ்டிரா, நண்டூர்பார் ஸ்ரீ கோவர்தன்சிங்ஜி ரகுவன்ஷி சஹகாரி வங்கி லிமிடெட்டுக்கு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்குப் பொருந்துவது)–ன் சட்டப்பிரிவு 35 A பிரிவு (1)ன் கீழ் மற்றும் வங்கிகள்ஒழுங்குமுறைச்சட்டம் பிரிவு எண் 56 ன் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்ரீ கோவர்தன்சிங்ஜி ரகுவன்ஷி சஹகாரி வங்கி லிமிடெட், நண்டூர்பார், மஹாராஷ்டிரா வங்கிக்கு கட்டுப்பாட்டு உத்தரவுகளை பிறப்பித்தது. இதன்படி மேலே குறிப்பிட்ட வங்கி, செப்டம்பர் 9, 2015 அலுவல் நேர முடிவிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் எழுத்துப் பூர்வமான முன் அனுமதியின்றி, செப்டம்பர் 8, 2015 தேதியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளில் குறிப்பிட்டுள்ளபடியன்றி, கடன் மற்றும் முன் தொகைகளை அளிப்பதோ, புதுப்பிப்பதோ, ஏதேனும் முதலீடு செய்வதோ, கடனாக பணத்தைப் பெறுவது மற்றும் புது டெபாசிட்டுகளை ஏற்றுக்கொள்வது, ஏதேனும் பணம் பட்டுவாடா செய்வது, அல்லது பட்டுவாடா செய்ய ஒப்புக்கொள்வது, வேறு பொறுப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்காக அல்லது வேறு எதற்காகவோ பணம் செலுத்துதல், நிதிசார் ஒப்பந்தங்கள் / ஏற்பாடுகள் செய்துகொள்ளுதல், வங்கியின் சொத்துக்களில் எதையேனும் விற்றல், மாற்றல் அல்லது அவை சார்ந்த விவகாரங்களளில் ஈடுபடுதல் கூடாது. உத்தரவுகளின் ஒரு பிரதி பொதுமக்களில் விருப்பமுள்ளவர்கள் பார்வைக்காக வங்கி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மொத்த நிலுவையில் ரூ. 1,000/-க்கும் மிகாத தொகையை (ரூபாய் ஆயிரம் மட்டும்), இது எந்தக் கணக்கில் இருந்தாலும், அதாவது சேமிப்புக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது எந்தப் பெயரில் அழைக்கப்படும் எந்த ஒரு டெபாசிட்டாக இருந்தாலும் மேலே குறிப்பிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு உட்பட்டு, டெபாசிட் வைத்திருப்பவர் திரும்ப எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி மேலே குறிப்பிட்ட உத்தரவுகளை வெளியிட்டதைக் கருத்தில் கொண்டு, வங்கி நடத்துவதற்கான உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்து விட்டதாகக் கருதக் கூடாது. தனது நிதிநிலை மேம்படும்வரை , சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, வங்கி தனது வங்கி வர்த்தகத்தைத் தொடரலாம். இந்திய ரிசர்வ் வங்கி, சூழ்நிலைக்கேற்றவாறு வழிகாட்டு உத்தரவுகளில் திருத்தங்கள் செய்ய முனையும்.

அஜித் பிரசாத்
உதவி மேலாளர்

PRESS RELEASE: 2015-2016 / 630

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்