Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (39.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 06/09/2002

வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினர்களிடமிருந்து கடன்கள் வாங்குவதில் விதிகள் தளர்வு

இந்தியாவில் குடியிருப்போரின் அந்நியச் செலாவணி நடவடிக்கைகள் பற்றி இப்போதுள்ள சட்டங்களிலும் விதிமுறைகளிலும் தளர்வு செய்யும் வகையிலும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் நோக்கிலும், ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாங்கும் கடனுக்கு வட்டியில்லாமலும், ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பிச் செலுத்த வேண்டாத நிலையிலும் இருப்பின், வெளிநாட்டிலுள்ள தங்களது நெருங்கிய உறவினர்களிடமிருந்து அமெரிக்க டாலர் 250,000 வரை கடன் பெறுவதற்கு இப்போதுள்ள விதிமுறைகள் பொது அனுமதி வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கியால் பெறப்பட்ட வேண்டுகோளின்படி அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குரிய காலத்தினை ஓராண்டாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் குடியிருப்போர் வெளிநாட்டில் உள்ள தங்கள் நெருங்கிய உறவினர்களிடமிருந்து 250,000 அமெரிக்க டாலர்வரை வட்டியில்லாமலும் ஓராண்டுக்குப் பின்னர் திருப்பிச் செலுத்தும் வகையிலும் கடனாகப் பெறமுடியும்.

அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டம் (FEMA) 1999இன்படி இப்போதுள்ள சட்டங்கள்/விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப் படும்வரை ரிசர்வ் வங்கியின் வட்டார அலுவலகங்கள், இது தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை விரைந்து பரிசீலிக்கும்.

அல்பனா கில்லாவாலா

பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு-2002-2003/266

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்