Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (56.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 21/07/2003

வழக்கமான வங்கி வாடிக்கையாளரை உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறையின் எல்லா நலன்களையும் பெற்றவர்களாக மாற்றும் செயற்பாங்கு - இந்திய ரிசர்வ் வங்கி வற்புறுத்துகிறது

ஜூலை 21, 2003

இந்திய ரிசர்வ் வங்கி உதவி ஆளுநர் உயர்திரு வேபா காமேசம் இன்று வங்கிகள் யாவும் அவற்றின் முழுமையான உள்ளமைப்பு வசதிகளையும் மனித ஆதார வளங்களையும் இணையீட்டுச் செயல் குறைகளையும் பாதுகாப்பையும் செம்மையாக்கி உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறையின் (RTGS) பலன்கள் யாவற்றையும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு வழங்க உறுதியூட்ட வேண்டுமென வற்புறுத்தினார்.

நவீன, ஊக்கமிக்க பாதுகாப்பான பணம் வழங்கல் மற்றும் பரிமாற்றங்களை முடித்துத் தருதல் ஆகிய செயல்பாடுகளை ஒன்றிணைத்து எவரும் மிகக்குறைந்த செலவில் மிகச் சிறந்த சேவை மூலம் அவர் விரும்பும் நபருக்குப் பணம் செலுத்துவதற்கான செயல்முறையை நடைமுறைப் படுத்துவதே ஒவ்வொரு மத்திய வங்கியின் இன்றியமையா நோக்கங்களுள் ஒன்றென அவர் குறிப்பிட்டார். அன்று இந்திய ரிசர்வ் வங்கியில் நடந்த கூட்டத்தில் தலைமை நிருவாகிகளுடன் உயர்திரு வேபா காமேசம் உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறையைச் (RTGS) சிறப்பாகச் செயல்படுத்த வங்கிகளின் தயார்நிலையை மதிப்பிடவே இந்தக் கூட்டம் நடந்தது.

உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமை (RTGS) 2003ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதிக்குள் நடைமுறைப் படுத்துவதற்கு முன்னதாகவே அதற்கு இணையான செயல்முறை நிறுவிச் சோதித்து நடைமுறைப் படுத்தப்பட்டது. உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) காலதாமததிற்கு இடம் தராத வகையில் அடுத்தடுத்து பரிமாற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாக உடனுக்குடன் முடிக்கும் திறனோடு மிக விரைவாக பெருந்தொகைகளை வங்கிகளிடையே வழங்கி அதற்கான முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது. இது செயல்திறனைக் கூடுதலாக்குவதோடு இப்போதுள்ள தீர்வு தொடர்பான இடையூறுகளையும் வெகுவாகக் குறைக்கிறது.

உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமையை (RTGS) அறிமுகப்படுத்துவதற்கு முன்னேற்பாட்டுத் தேவைகள் சிலவுள்ளன. தொழில்கூட விரிவான செய்தித் தொடர்பு வலையமைப்பு உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறையளவு (RTGS) உட்பட வங்கியின் பணம் வழங்கு செயல்பாட்டினை அறிவார்ந்த கட்டுக்கோப்புடன் நடைமுறைப் படுத்த நம்பிக்கைமிக்க விரிவாற்றலுடைய நடைமுறைச் சிறப்புமிக்க கணினிமேடை அமைப்பு மின்னணு முறையில் பணப்பட்டுவாடா மற்றும் தீர்வுகாணும் முறைமைவு வசதிகள், வங்கிக்குள்ளேயும் வெளிவங்கிகளோடும் தொடர்பு கொள்ள தரப்படுத்தப்பட்ட தகவல் அனுப்பு வடிவளவுகள் பன்னாட்டுத் தரமுடைய பாதுகாப்பு மிக்க தகவல் அனுப்ப செம்மையான முறைமைவு வசதிகள், ஒவ்வொரு உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) பங்கு நபரின் முறையான வணிகரீதியான மறு பொறியமைப்பண்மைத்திறன் அத்தோடு முன்னேறிய கொடுக்கல் வாங்கல் கணக்குகளில் தீர்வுகாணும் தனித்திறன் மேலோண்மை ஆகியன அவற்றுள் அடங்குவன. அநேகமாக இந்த நிபந்தனைகள் யாவும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டவையே என்பது அறியப்பட்டதே.

இச் சூழலில் வங்கியாளர்கள் அந்தக் குறிப்பிட்ட நாளுக்கு SLR பத்திரங்களைத் துணைப் பிணையமாகப் பாவித்து இரண்டாம் கடன் சரிப்படுத்து வசதிகொண்ட ஏலம் மூலம் முன் அறிவிப்பின்றி வாடிக்கையாளர் கணக்கிலிருந்து பெரும் வரவுத் தொகையை மாற்றித் தருவதற்கான வாய்ப்பின் தேவை குறித்தும் அதற்குச் சிறந்த முறையில் ரொக்கப் பண மேலாண்மையை வங்கிகள் பெற்றிருக்கவேண்டியது அவசியம் என்பதை வங்கியாளர்கள் விவாதித்தனர். அத்தோடு உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமைவு (RTGS) நாட்களுக்கிடையேயான கடன் தீர்க்கும் மேலாண்மை வழியாக கிடைக்கப்பெறும் புது வசதிகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் எனத் துணை ஆளுநர் சுட்டிக் காட்டினார். அவரது கூற்றுப்படி, கட்டண அடிப்படியிலான உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) சேவைகளினால் வாடிக்கையாளர்கள் மூலம் வங்கிக்குக் கூடுதல் வருவாய் ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புள. உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமைவை (RTGS) செயல்படுத்துவதால் வணிகர்களுக்கு ‘மிதப்புப் பணம்’ கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் பாதிக்கப்படலாம், அதன் காரணமாக அவர்கள் தங்கள் பொருட்களின் விலைக்கட்டமைப்பை மறுபார்வை இடலாம். என அவர் வங்கிகளை எச்சரித்தார்.

உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறைமைவின் (RTGS) முன்னேற்றச் செயல்பாட்டை மறு ஆய்வுக்குட்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி மையப்படுத்தப் பட்ட நிதிமேலாண்மை (மைநிமேமு) முறையமைவைச் செயல்முறைப்படுத்தியதின் விளைவாக நாடங்கிலுமுள்ள 15 இந்திய ரிசர்வ் வங்கி மையங்களின் மூலம் வங்கிகளுக்கு அவர்களது நடப்பு ஒழுங்குதிரண்ட நிதிகளின் நிலைப்பாட்டை உடனுக்குடன் அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என்பதை துணை ஆளுநர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் 2003 வாக்கில் மையப்படுத்தப்பட்ட நிதிமேலாண்மை முறையமையின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கும் வங்கிகளுக்குமிடையே நிதி மாற்று வசதிகளை ஏற்படுத்தி தரும் என்பதும் அறிவிக்கப்பட்டது. தக்க பாதுகாப்புடன் பன்னாட்டு நிதி மாற்றுமுறையில் பின்பற்றப்படும் தகவல் முறைமைவான SWIFT போன்ற கட்டமைப்பாக சீராக்கப்பட்ட தகவல் பறிமாற்ற முறையமைவை இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது.

துணை ஆளுநர், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் , நிறுவனங்களுக்கும் இடையே நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்டு, வங்கிகளின் தலைமை நிர்வாகிகள் இயைபூக்கிகளாகச் செயல் படவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) வசதிகள் வழக்கமான வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய முழுமையான கட்டுமான அமைப்பு மற்றும் மனிதவள ஆதாரங்கள் ஆகியன தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். தற்போதைய பண வழங்கல் வழிமுறை காசோலைகள் மற்றும் இதர சாதனங்கள் அடிப்படையில் பற்றுப் பரிமாற்றமுறை அமையவே, ஆனால் உடனுக்குடனான மொத்த ஒப்பந்த முறை (RTGS) மறு தொடர்புணர்வுப் பயிற்சியை எதிர்பார்க்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் விபரம் அறிந்தவர்களாக அமையவேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியின் கிளைகளான 21 மையங்களுக்கும் வணிகரீதியான 126 இதர வங்கிகளின் கிளைகளுக்கும் இடைவே இடையீட்டுச் செயல்பாடு மிக இன்றியமையாதது எனவும் அவர் கூறினார். எனவே உயர்திரு காமேசம் அவர்களது கருத்துப்படி இதன் இறுதி நோக்கம் நகரப்பகுதியில் வாழும் வாடிக்கையாளர்களை மட்டுமல்ல; நாட்டுபுறத்திலுள்ளோரையும் இவ்வசதி சென்றடைய வேண்டும் என்பதே.

அஜித் பிரசாத்

மேலாளர்

 செய்தி வெளியீடு 2003-2004/96

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்