Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (123.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 08/01/2004
பணத்தாள் கட்டுகளைக் கம்பியால் பிணைப்பிடும் வங்கிகள் தண்டிக்கப்படவேண்டியவை – இந்திய ரிசர்வ் வங்கி

பத்திரிக்கைக் குறிப்பு

 

 

 

 

இந்திய ரிசர்வ் வங்கி

பத்திரிக்கைத்தொடர்பு அலுவலகம்,

மத்திய அலுவலகம், தபால் பெட்டி எண் 406,

மும்பை – 400 001.

www.rbi.org.in

e-mail: helpprd@rbi.org.in

 

ஜனவரி 8, 2004

 

பணத்தாள் கட்டுகளைக் கம்பியால் பிணைப்பிடும்

வங்கிகள் தண்டிக்கப்படவேண்டியவை – இந்திய ரிசர்வ் வங்கி

 

                பணத்தாள் கட்டுகளுக்கு கம்பிப் பிணைப்பிடுவது முற்றிலும் விலக்கப்பட்ட ஒன்று; எந்த வங்கியும் அல்லது வங்கிக் கிளையும் பணத்தாள் கட்டுகளைக் கம்பிப்பிணைப்பிட்டு வழங்குவதோ அல்லது பெறுவதோ கூடாது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி திரும்பத் திரும்ப வலியுறுத்தியது.  அத்தோடு, எந்த வங்கியாவது அல்லது வங்கிக் கிளையாவது பணத்தாள் கட்டுகளைக் கம்பிப்பிணைப்பிட்ட நிலையில் வாங்குவது அல்லது கொடுப்பது கண்டு பிடிக்கப்பட்டால், நடைமுறையிலுள்ள வங்கி நெறிமுறைச் சட்டம் 1949ன் அடிப்படையில் அவ் வங்கிகள் தண்டனைக் குரியவை என்பதையும் அறிவித்தது.

 

                இந்திய ரிசர்வ் வங்கி சென்ற ஆண்டு நெறிப்படுத்து ஆணை ஒன்றினை 1949ஆம் ஆண்டு வங்கி நெறிமுறைச் சட்டம் 35A பிரிவின் கீழ் வெளியிட்டது.  அதன்படி மண்டல கிராமப்புற வங்கிகள், உள்ளாட்சிப் பகுதி உட்பட்ட வங்கிகள் உள்ளிட்ட எல்லா வணிகமுறைக்கு வங்கிகளும் பணத்தாள் கட்டுகளுக்கு கம்பிப்பிணைப்பிடும் செயலைத் கைவிட்டு அவற்றைத் தாள் கச்சைகளைக் கொண்டு பாதுகாப்பாகக் கட்ட வேண்டும் என அறிவுறுத்தியது.  அத்தோடு வங்கிகள் தூய பணத்தாள்களை மட்டுமே பொது மக்களுக்கு வழங்கவேண்டும் எனவும் பணத்தாள்களின் நீரோட்டக் கோட்டின் மீது எழுதுவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. எனினும் பொதுமக்களிடமிருந்து, நகரப்புற கூட்டுறவு வங்கிகள் மாநிலக் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மைய  கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல வங்கிகளும் வங்கிக் கிளைகளும் கம்பிப்பிணைப்பிட்ட பணத்தாள்களை வழங்குவதையும் பெறுதலையும் செயல்படுத்துகின்றன எனும் குற்றச் சாட்டுகள் வங்கிக்கு வரப்பெற்றன. பணத்தாள்களை இச் செயல் பாதிப்பதோடு பணத்தாள்களின் வாழ்நாளையும் கம்பிப்பிணைப்பிடல் குறைக்கிறது.  அத்தோடு வாடிக்கை யாளர்கள் கம்பிப்பிணைப்பிட்ட பணத்தாள் கட்டுகளின் கம்பிகளை அகற்றுவது மிக்க இடர்பாடான செயலாக அமைகிறது.

அல்பனா கிள்ளாவாலா

தலைமை பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு 2003-2004/841

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்