Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (61.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 15/01/2005

துயர்நீக்க / சேமிப்பு பத்திர வெளியீடு - முதிர்ந்த பத்திரங்களுக்கு கொடுப்பாணை / கேட்போலை வழங்குதல்

RBI / 2004-05 / 347
No.CO.DT.13.01.299/H.6284 – 6313 / 2004-05

ஜனவரி 15, 2005

தலைவர் / நிர்வாக இயக்குநர்
பாரத ஸ்டேட் வங்கி / அதனுடன் சேர்ந்த வங்கிகள்
17 நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள்
ICICI / IDBI / HDFC / UTI Bank Ltd.
SCHIL

அன்புடையீர்,

 துயர்நீக்க / சேமிப்பு பத்திர வெளியீடு - முதிர்ந்த பத்திரங்களுக்கு கொடுப்பாணை / கேட்போலை வழங்குதல்

மேலே கண்ட பத்திரங்களை பலர் பெயரில் கூட்டாக இருப்பின், அது முதிர்வடையும் போது அத்தனை பெயருக்கும் தான் தற்சமயம் கொடுப்பாணை / கேட்போலை வழங்குகப்படுகிறது. அவர்கள் அவர்களில் யாரேனும் ஒருவற்கு அதனை அனுப்பலாமே என்று கோரிக்கைகள் விடுத்தனர். இதனை ஆராய்ந்ததில், 1872 இந்திய ஒப்பந்தச்சட்டம் பிரிவு 45 கூட்டு உரிமை பகிர்ந்தளிப்பது பற்றிக் கூறுகிறது. கூட்டுரிமை இருக்கும் போது அதற்கு மாறான எண்ணம் இருப்பின் அது தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகார அளிப்பு (Power of Attorney) பத்திரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தங்களில் யார் கையெழுத்திடல் வேண்டும் என அறிவிக்கலாம். எனவே பலர் கூட்டாக மேலே கண்ட பத்திரங்களை வாங்கியிருந்தால், அவர்கள் அவர்களில் ஒருவற்கு அதிகார அளிப்புப் பத்திரம் இணைக்கப்பட்டுள்ள மாதிரி படிவத்தை ஒத்த பத்திரத்தில் இசைவும் கையெழுத்தும் இட்டால், அப்படி அதிகாரம் வழங்கப்பட்டவர் பெயரில் முதிர்வுத் தொகையை வழங்கத்தடை ஏதுமில்லை. அதிகாரம் அளிப்புப்பத்திரம் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டற்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுவது சட்ட ரிதியான சரியான நடவடிக்கையாகும்.

2. வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் பொருட்டு, கூட்டாகப் பத்திரங்கள் வைத்திருப்பவர்கள் தங்களில் ஓராண்டு முதிர்வுத் தொகை வழங்கப்படலாம் என்று அதிகார அளிப்பு பத்திர வாயிலாகத் தெரியப்படுத்தி இருந்தால் அவருக்கு வழங்கலாம். வட்டி வழங்கப்படும் ஒலைகள் மற்றவர்கள் எழுத்து மூலம் ஒப்புதல் அளித்தால் முதல் நபருக்குக் கொடுக்காலாம்.

3. எனவே அதிகார அளிப்புப் பத்திரத்தில் யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றதோ அவர் பெயரில் முதிர்வு தொகைக்கான சொல்பாணை வழங்கப்படலாம்.

4. சம்பந்தப்பட்ட கிளைகளுக்கும் தயவு செய்து அறிவிக்கவும்.

5. கிடைத்தமைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

நம்பிக்கையுள்ள

 

D. ராஜகோபால ராவ்
துணைப் பொது மேலாளர்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்