Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (40.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 30/08/2005

வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் 1949 - பிரிவு 23 - வீட்டு வாயிலில் வங்கிப் பணி

RBI/2004-05/449
DBOD.No.BL.BC.86/22.01.001/2004-05

ஏப்ரல் 30, 2005

பிராந்திய கிராம வங்கிகளைத் தவிர
அட்டவனையிலுள்ள வணிக வங்கிகள்

அன்புடையீர்,

 வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் 1949 - பிரிவு 23 - வீட்டு வாயிலில் வங்கிப் பணி

1983 மே 24 தேதியிட்ட எங்களது சுற்றறிக்கை DBOD.No.BL.BC. 42/C-168-83ஐப் பார்க்கவும். ரிசர்வ் வங்கியிலிருந்து உரிய அனுமதியைப் பெறாமல், வங்கிகள் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திலேயே வங்கிச் சேவைகளைச் செய்யக்கூடாது என அறிவுறுத்தியிருந்தோம்.

2. ரயில்வே போன்ற பல அரசு நிறுவனங்கள், தாங்கள் வருவித்த பணத்தை வங்கியில் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகளை தங்கள் அலுவலக வளாகத்திலேயே செய்து முடித்திட கோரிக்கைகள் விடுத்ததையும், வங்கிகளிடமிருந்து இது சம்பந்தமாக வந்த விருப்ப விண்ணப்பங்களையும் பரிசீலித்ததில், 1949 வங்கி ஒழுங்கு முறைச் சட்டம் பிரிவு 23ன் கீழேயே, வாடிக்கையாளரின் வளாகத்திலேயே வங்கிப் பணி/சேவைகளைச் செய்திட வங்கிகள் ஒழுங்குமுறைகளை வகுத்துத் தங்கள் இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.

3. மத்திய மாநில அரசுகளின் இலாகாக்களிடமிருந்து, பணம்/ காசோலைகள் இவைகளே வங்கிகள் அவர்கள் அலுவலகத்திற்கே சென்று பெற்றுக்கொண்டு வங்கிச் சேவைகளை மேற் கொள்ளலாம்.

உங்கள் உண்மையுள்ள

ஆனந் சின்ஹா
தலைமை பொது மேலாளர் பொறுப்பு

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்