Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (52.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 23/01/2006

கணக்கில் பணம் பெறுவோர் காசோலையை பணமாக்குதல் / - முன்றாம் நபரின் கணக்கில் வரவி வைப்பதை தடை செய்தல்

RBI/2005-06/282

DBOD.BP.BC.NO.56/21.01.001/2005-06 ஜனவரி 23, 2006

வணிக வங்கிகளின் தலைவாகள் / உயர் அதிகாரிகள்
(RRB நீங்கலாக)

அன்பிடையீர்

கணக்கில் பணம் பெறுவோர் காசோலையை பணமாக்குதல் / -
முன்றாம் நபரின் கணக்கில் வரவி வைப்பதை தடை செய்தல்

கணக்கில் பணம் பெறுவோரின் காசோலையை பணமாக்கும்போது வங்கிகள், எச்சரிக்கையுடன் பணம் பெறுவோருக்காக பணமாக்க வேண்டும். குறிப்பாக கணக்கில் பணம் பெறுவோரின் காசோலைகள் (A/c Payee) வங்கிகளின் பெயரில் எழுதப்படுகிறது, இதை 1992 செப்டம்பா 9 தேதியிட்ட எங்கள் சுற்றறிக்கை ல் சுட்டிக்காட்டியருந்ததை காண்க. அதாவது கணக்கு வைத்திருப்பவரின் பெயரால் அல்லாமல் பிற வங்கிகளால் தங்கள் பெயருககு “கணக்கில் பணம் பெறுவோர்” (A/c Payee) என்று குறப்பிட்டு எழுதப்பட்ட காசோலைகளை, காசோலை எமுதியவரின் (Drawer) சரியான ஒப்பந்தமில்லாமல் பணமாக்கி பரவி வைக்கும் போது அந்த வங்கிகள் தங்கள் சொந்த பொறுப்பில் (இடர்வரவி நோக்கில்) (Risk) அதை செய்து, முறைகேடான பண வழங்கலுக்கு பொறுப்பேற்க வேண்டும்,

2. பங்குகள், ஆரம்ப பொது வெளியீடு நடைமுறைகளை குறிப்பிட்ட சில தனிநபர்/அமைப்புகள் சமீபத்தில் தவறாக பயன்படுத்தியது சம்பந்தமாக, SEBIயிடமிருந்து அறிக்கை பெற்று, இந்திய ரிசரவ் வங்கி, சில வங்கிகளில் முழு விவரத்துடன விசாரணை மேற்கொண்டு, பல்வேறுபட்ட கூட்டத்தார் இந்த நடைமுறையை சூழ்ச்ச்யாக கையாண்ட செயல்களை உறுதி செய்தது. மேற்கண்ட விதிமுறைகளுக்கு (நெறிமுறைகள்) எதிராக தனிநபா கணக்கில் பணம் பெறுவோர் திருப்பிக்கொடுக்கும் உத்தரவில் வந்த பணத்தை, இந்தக் கணக்கிற்கு பதிலாக (DP) பத்திரங்கள் மேல் பணம் வழங்குவோர் சங்கத்தின் வேண்டுகோளின்படி தரகர்களின் கணக்கில், வங்கிகள் வரவு வைத்துள்ளது தெரியவந்துளளது. இதன் விளைவாக பணம் வழ்ங்கல் முறையில் சூழ்ச்சி செய்வதற்கும் விதிக்குப் புறம்பாக குற்றஞ்செயவதற்கும் வசதி ஏற்படுகிறது. இந்த முறைகேடுகள் நடக்கக்கூடாது, ஆனால் கணக்கில் பணம் பெறுவோர் காசோலைகளை பணமாக்கும் வங்கிகள் நடைமுறையிலிருந்து விலகிக் கொள்கின்றன. இப்படி விலகிச் செல்தல் வங்கிகளின் அபாய நேரவுக்கு (Risks) ஆற்றலாக வெளிப்படுவதால், விவேகமான/திறமையான சந்தை பழக்கங்களால் இந்த குறைகளை சீர் செய்ய முடியாது,

3. சட்டத்தேவைகளில் உடன்பாடான நிலை, குறிப்பாக பணமாக மாற்றக்கூடிய உபகரணங்கள் சட்டதின் (NI Act) உள்நோக்கம் திருப்திகரமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் அனுமதியற்ற பணமாக்கலால் உண்டான கடன்பாரங்களில் இருந்தும், பணம் வழங்கல் மற்றும் வங்கிகளின் நடைமுறை நிலைத்தன்மையும், ஒழுங்கு நலனும், பாதுகாக்கப்படவும் நடைமுறைகள் திருப்பத் திரும்ப மீறப்பட்டதும் முன்னெச்சரிக்கையுடன் தடுக்கவும். கணக்கில் பணம்பெறுவோர் காசோலையில் வந்த பணத்தை பணம் பெறுவோர் பெயரில் அல்லாமல் வேறு நபரின் கணக்கில் வரவு வைப்பதை தடைசெய்யவேண்டியது அவசியம் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. ஆதலால் கணக்கில் பணபம் பெறுவோர் காசோலைகளை, அந்த கணக்கைத் தவிர வேறு நபருக்காக பணமாக்க வேண்டாம் அன் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டளையிட்டிருக்கிறது.

4. பணம் பெறுவோரின் கணக்கில் அல்லாமல், மற்ற கணக்கில் வரவு வைக்கச் சொல்லி காசோலை எமுதியவரும்/பணம் பெறுவோரும் வங்கிக்கு அறிவிறுத்தியிருந்தால் அந்த அறிவிறுத்தல் “கணக்கில் பணம் பெறுவோர்” (A/c Payee) காசோலையின் இயல்பான தன்மைக்கு முரண்பட்டதாக கருதப்படும். கூடவே, வங்கிகள் காசோலை எழுதியவர்/பணம் பெறுபவரிடம் காசோலை திரும்பக் கொடுத்து, ஒப்பந்தத்தையம் திரும்ப பெற்றுக் கொள்ளும்படி கேட்க வேண்டும். இந்த அறிவுறுத்துதல், வங்கிகள் மற்ற வங்கிகளின் பேரில் பணம் கொடுக்க வேண்டி காசோலலை எழுதும்போதும், பின்பற்றப்பட வேண்டும். 1992 செப்டம்பர 9 தேதியிட்ட வங்கிகள் சுற்றறிக்கை சிறு மாற்றத்துடன் விரிவுபடுத்தப்பட்டு இந்த அறிவுறுத்தல்கள் இடம் பெற்றுள்ளது,

5. வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949 பிரிவு 35Aன்படி கொடுக்கபட்ட அதிகாரத்தை நடைமுறைப்படுத்த இந்த வழிமுறைகள் வெளியிடப்படுகிறது

 

நம்பிக்கையுள்ள

 

(ஆன்ந்த் சின்ஹா)
செயல் இயக்குனர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்