Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (50.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 04/07/2006

மின்னணு தீர்வு சேவை – பற்று தீர்வு – வாதிக்கையாளர் உரிமைக்கட்டளைகள்

RBI/2006-07/48

Ref.DPSS(CO) No.5/04.01.01/2006-2007 ஜூலை 04, 2006

மின்னணு தீர்வு சேவையில் பங்கேற்கும் அனைத்து வங்கிகளுக்கும்
(பற்று தீர்வு)

அன்புடையீர் ,

மின்னணு தீர்வு சேவை – பற்று தீர்வு – வாதிக்கையாளர்
உரிமைக்கட்டளைகள்

 மின்னணுதீர்வு சேவையின் கீழ் பரிவர்த்தனைகளின் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். பற்றுத்தீர்வு பரிவர்த்தனைகளின் வளர்ச்சி வரவுத் தீர்வு பரிவர்த்தனைகளைவிட அதிகமாக உள்ளது. பல்வேறு பயனுடைமை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இந்த முறைமையைப் பயன்படுத்தி பயனுடைமைகளுக்கான தொகைகள் மற்றும் சமமான மாதாந்திரத் தவணைகளுக்கான தொகைகள் ஆகியவைகளை வசூலித்துக் கொள்கின்றன.

2. மின்னணு தீர்வு சேவை (பற்று), இலக்கு கொண்ட கணக்குதாரர்களாள் கொடுக்கப்பட்ட உரிமைக்கட்டளைகளின் வலிமையிலேயே செயல்படுகிறது. அவர்கள் தங்கள் உபயோகிப்பாளர் நிறுவனங்களிடம் தங்கள் கணக்கில் பற்றை உயர்த்துமாறு கூறுகிறார்கள். கணக்கு வைத்திருப்பவரோ அல்லது உபயோகிக்கும் நிறுவனமோ உரிமைக் கட்டளையின் பிரதியை வங்கிக்கு அனுப்பியதும், மின்னணு தீர்வு சேவை (பற்று தீர்வு) பெறப்படும் பற்று உத்தரவின் நம்பகத்தன்மையை அவ்வங்கி சோதித்திடும்.

3. சமீபத்தில் ரிசர்வ் வங்கி இயல்பாக நடத்திய சுற்றாய்வில், பல வங்கிக் கிளைகள் தேவையான உரிமைக் கட்டளைப் படிவங்களை சரியான முறையில் பராமரிக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. கணக்கு தீர்வு நிலையத்திலிருந்து பெறப்படும் மின்னணுத்தீர்வு சேவை (பற்று) கோப்பின் அடிப்படையில் பற்றுக் கணக்கை உயர்த்துவதை வங்கிகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. வங்கிக் கிளைகள் மேலும் குறிப்பிடுவது என்னவென்றால் அவர்கள் பயன்படுத்தும் பென்பொருளில், மின்னணு தீர்பு சேவைக்கான (பற்று) உரிமைக் கட்டளைகளை பதிவு செய்ய எந்த வசதியும் இல்லை. அப்படியே இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு உரிமைகட்டளைகளுக்குத்தான் உள்ளது. ஆனால் சில கணக்குதாரர்கள் பல்வேறு பயனுடைமை நிறுவன்ங்களுக்கு உரிமைக் கட்டளைகளை அளித்து மின்னணு தீர்வு சேவை மூலமாக பற்றை உயர்த்துகிறார்கள்.

4. உள் பொறுப்பாண்மை வேலையின் ஒரு பகுதியாக, பற்று உரிமைக் கட்டளை நிர்வாக முறைமை இருந்திட வேண்டும் என்பதனை இவ்விஷயத்தில் குறிப்பிடுறோம். ஒவ்வொரு தனிப்பட்ட பரிவர்த்தனைக்கு உச்ச வரம்பையும், செல்லும்படியாகும் காலதகட்டத்தையும் உரிமைக்கட்டளை கொண்டிருக்க வேண்டும். உச்ச வரம்பு ஒரு உரிமைக் கட்டளைக்கும் மற்றொரு உரிமைக் கட்டளைக்கும் மாறுபடுகிறது. DPSS(co) nO.950/04.01.01/2005-2006 2005 ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, காசோலை தீர்வு முறைமையில் ஒரு வாடிக்கையாளரின் முறைமையில் திரும்பப் பெறும் உத்தரவு பணம் கொடுப்பதை நிறுத்தும் உத்தரவிற்கு சமமாக நடத்த வேண்டும். எனவே, உரிமைக் கட்டளைகளையும ஏதேனும் திரும்பப் பெறுவது இருந்தாலும் அவைகளைப் பதிவு செய்வதிலும் போதிய கவனத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

5. மின்னணு தீர்பு சேவை (பற்று) பரிவர்த்தனைகளை கையாண்டிட சரியான உரிமைக் கட்டளை நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு உங்கள் வங்கியை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

தயவு செய்து கடிதம் பெற்றமைக்கு ஒப்புதல் அளித்து, நிறைவேற்றுதலை உறுதிசெய்யுங்கள்.

 

உங்கள் நம்பிக்கைக்குரிய

 

K.N. கிருஷ்ணமூர்த்தி

பொது மேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்