Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (141.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 14/11/2016
500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும், எடுப்பதற்குமான வசதிகளை அதிகப்படுத்துதல்

அறிவிப்பு எண் 131
Ref. No. DCM (Plg) 1274/10.27.00/2016-17

நவம்பர் 14, 2016

தலைவர் / நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
பொதுத்துறை வங்கிகள் / தனியார் துறை வங்கிகள் /
வெளிநாட்டு வங்கிகள் / பிராந்திய கிராமப்புற வங்கிகள் /
நகரக் கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள் /
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்

அன்புடையீர்

500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலக்க நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படுகின்றன – நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும், எடுப்பதற்குமான வசதிகளை அதிகப்படுத்துதல்

நவம்பர் 08, 2016 தேதியிட்ட மேற்குறிப்பிட்ட விஷயங்குறித்த எங்களின் சுற்ற்றிக்கை No. DCM (Plg) / 1226 /10.27.00 / 2016-17-ஐப் பார்க்கவும். குறிப்பிட்ட வங்கி நோட்டுகளை மாற்றவும், கணக்கில் டெபாசிட் செய்யவும், வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கவும் உள்ள வசதிகளை அதிகரிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு முடிந்த அளவு சௌகரியங்களைச் செய்து தரவும் பின்வரும் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வங்கிகள் அறிவுறுத்தப்படுகின்றன.

கூடுதல் வசதிகள்

  1. நடப்புக்கணக்கு வைத்திருப்போர் (கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக செயல்படும் வகையில் உள்ள நடப்புக் கணக்குகள்) ஒரு வாரத்திற்கு ரூ. 50,000 வரை கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இவை பெரும்பாலும் ரூ.2000 மதிப்பிலக்கத்தில் வழங்கப்படும்.

  2. கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், காவல் நிலையங்கள் / காவல் / ராணுவ எல்லை சோதனைச் சாவடிகள், அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவன அலுவலகங்கள், பெட்ரோல் நிலையங்கள் அல்லது வேறு பாதுகாப்பான இடங்களில் வங்கிகள் தங்களின் குறு ATM-களை (பாலமித்ரா போன்றவை) அமைக்கலாம். இதன்மூலம் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட நேரிடும். ஆகவே, இவற்றின் உச்சவரம்பை ரூ.50,000-ஆக உயர்த்தலாம். அவர்கள் அடிக்கடி பணம் மீட்டுப்பெறவும் அனுமதிக்கலாம்.

  3. வங்கிகளில்லாத, பயண வசதிகள் அதிகமில்லாத ஊர்களில் பணத்தை மாற்ற, டெபாசிட் செய்ய, பணம் எடுக்க வங்கிகள் மொபைல் வேன்களை உபயோகிக்கக் கருதலாம்.

  4. தேயிலை / காபித் தோட்டங்கள், சர்க்கரைக் கூட்டுறவு ஆலைகள், பால்பண்ணைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் பணியாளர்கள் அதிக அளவில் பட்டுவாடா செய்யும் மையங்களில் உள்ளவர்களுக்கு, வங்கிகள் முகாம் அடிப்படையில் கணக்குகள் தொடங்கி, அவற்றில் டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் வசதகிளை செய்துதரவேண்டும்.

  5. மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், வங்கிகளில் வேலைபளு அதிகமாவதால், ஓய்வுபெற்ற பணியாளர்களைக் குறுகியகாலத்திற்குப் பணியமர்த்தலாம்.

கண்காணிப்பு

  1. வங்கிகள் குறிப்பிட்ட வங்கிநோட்டுகளை டெபாசிட் செய்ய, தனி டெபாசிட் ஸ்லிப் உபயோகப்படுத்தப்படுவதை உறுதி செய்திட வேண்டும். வாடிக்கையாளர்கள் இரண்டையும் கலந்துவிடாமல், நோட்டுகளை இனம்பிரித்து டெபாசிட் செய்வதை உறுதிப்படுத்திடவேண்டும். வங்கிகளில் உள்ள CBS முறைமைகளில் டெபாசிட் செய்யப்படும் இந்த குறிப்பிட்ட வங்கிநோட்டுகளை வாடிக்கையாளர் / கணக்கு / கிளை வாரியாக கணக்கெடுப்பு செய்ய வசதியாகச் சில ஏற்பாடுகளை செய்திடவேண்டும். இவற்றைப் பின்னர் சோதித்து சரிபார்க்கவும் ஏற்பாடுகள் செய்திடவேண்டும்.

இங்ஙனம்

(P. விஜயகுமார்)
தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்