Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (120.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 01/09/2016
அங்கத்தினர்கள் தவிர மற்றவர்களுக்கு குறித்தகால வைப்புகளின் பேரில் கடன்

RBI/2016-17/57
DCBR.BPD(PCB)BC.No.3/12.05.001/2016-17

செப்டம்பர் 01, 2016

தலைமை நிர்வாக அதிகாரிகள்
ஊதியதாரர்கள் தொடக்கநிலை (நகர) கூட்டுறவு வங்கிகள்

அம்மையீர் / ஐயா

அங்கத்தினர்கள் தவிர மற்றவர்களுக்கு குறித்தகால வைப்புகளின் பேரில் கடன்

எங்களின் ஆகஸ்டு 8, 2001 தேதியிட்ட UBD No.BL(SEB)5A/07.01.00/2001-02 சுற்றறிக்கையின்படி ‘ஊதியதாரர்கள் கூட்டுறவு வங்கிகள்’, புதியதாக கிளைகள் திறக்க அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது, பின்வரும் கட்டளையை அவை பூர்த்தி செய்திட வேண்டும். வெளியாட்கள் (பணியாளர் அல்லாதவர்கள்) எவரையும் அங்கத்தினராக அல்லது பெயரளவில் அங்கத்தினர்களாகச் சேர்த்து அவர்களுக்குக் கடன் கொடுப்பதை அனுமதிக்கும் வகையில் அந்த ஊதியதாரர்கள் கூட்டுறவு வங்கியின் உபவிதிகள் அமைந்திருக்கக் கூடாது.

2. டிசம்பர் 14, 2015 அன்று நடைபெற்ற 32-வது ஆலோசனை நிலைக்குழுவின் கூட்டத்தில் நடந்த விவாதங்களுக்குப்பின், “ஊதியதாரர்கள் கூட்டுறவு வங்கிகள்” பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெளியாருக்குக் கடன் வழங்கலாம் என்று அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

நிபந்தனைகள்:

  1. நிதிநிலையில் வலிமை மற்றும் நிர்வாகத்தில் மேன்மை இவற்றிற்காக அக்டோபர் 13, 2014 மற்றும் ஜனவரி 28, 2015 தேதிகளில் வெளியிடப்பட்ட முறையே UBD.CO.LS(PCB)Cir.No.20/07.01.000/2014-15 மற்றும் DCBR.CO.LS(PCB)Cir.No.4/07.01.000/2014-15 சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதித் தேவைகள் அனைத்தையும் அந்த ஊதியதாரர் கூட்டுறவு வங்கி பூர்த்தி செய்திடவேண்டும்.

  2. ஜூலை 25, 1994-ம் தேதியிட்ட UBD.No.Plan(PCB).9/09.06.00/94-95 சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செயலாற்றும் வகையில் ஊதியதாரர் கூட்டுறவு வங்கி நிர்வாக மன்றக் குழுவின் அங்கத்தினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு தணிக்கைக் குழு இருக்கவேண்டும்.

  3. வெளியாருக்கு (அங்கத்தினர் அல்லாதவர்) அவர்கள் பெயரிலோ, தனியாகவோ அல்லது கூட்டாக வெளியார் அல்லது அங்கத்தினருடனோ வைத்திருக்கும் குறித்தகால வைப்பின் பேரில் கடன் கொடுக்க அனுமதி அளிக்கும் வகையில் வங்கியின் உபவிதிகளில் ஒரு ஷரத்து இருக்கவேண்டும்.

  4. ஊதியதாரர் கூட்டுறவு வங்கியின் நிர்வாக மன்றக் குழு அனுமதித்த கொள்கைப்படி, வெளியாருக்கு (அங்கத்தினர் அல்லாதவர்) அளிக்கும் மேற்குறிப்பிட்ட வகையிலான கடன்களில், எல்லா நேரங்களிலும் ஒரு நியாயமான விளிம்புத் தொகையை வைத்திருக்கவேண்டும்.

  5. அங்கத்தினர் அல்லாதவர்களுக்குக் குறித்த கால வைப்புகள் மீதான கடன் தவிர, வேறு எந்த வகையிலான கடன்களையும் அளிக்கக் கூடாது.

3. ஆகஸ்டு 08, 2011 தேதியிட்ட UBD.No.BL(SEB)5A/07.01.00/2001-02 சுற்றறிக்கையில் உள்ள இதர நிபந்தனைகள் மாற்றமின்றி இருக்கும்.

இங்ஙனம்

(A.G. ரே)
பொதுமேலாளர் - பொறுப்பு

இங்ஙனம்

(சுமா வர்மா)
முதன்மைத் தலைமைப் பொதுமேலாளர்

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்