Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> அறிவிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (141.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 05/05/2016
Currency Distribution & Exchange Scheme (CDES) for bank branches based on performance in rendering customer service to the members of public

RBI/2015-16/393
DCM (CC) No.G-10/3352/03.41.01/2015-16

மே 05, 2016

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் /
தலைமை நிர்வாக அதிகாரி
அனைத்து வங்கிகள்

அம்மையீர் / ஐயா

பொதுமக்களுக்கு வாடிக்கையாளர் சேவை அளிப்பதில் வங்கிக் கிளைகளின்செயல்திறன் சார்ந்த “ரூபாய் நோட்டுகள் விநியோகம் மற்றும் பரிமாற்றம் செய்யும் திட்டம்“ (Currency Distribution & Exchange Scheme – CDES)

“ஊக்குவிக்கும் சலுகைகள் மற்றும் அபராதங்கள் திட்டம் – சீராய்வு “ குறித்த மே 21, 2015 தேதியிட்ட சுற்றறிக்கை எண் DCM (CC) No.4846/03.41.01/2014-15-ஐப் பார்க்கவும்.

2. மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, ‘ஊக்குவிக்கும் சலுகைகள் மற்றும் அபராதங்கள்’ திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி, ஊக்குவிப்பு சலுகைகளைத் தனியாகப் பிரிப்பதெனவும், சில ஊக்குவிப்புகளை மாற்றி அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மாற்றப்பட்ட ஊக்குவிப்பு சலுகைகளை உள்ளடக்கிய “ரூபாய் நோட்டுகள் விநியோகம் மற்றும் பரிமாற்றம் செய்யும் திட்டம்“ (CDES) இணைப்பில் கண்டுள்ளபடி, தேவையான நடவடிக்கைக்கு அனுப்பப்படுகிறது. மேற்குறிப்பிட்டபடி செயல்திறன் சார்ந்த ஊக்குவிப்பு சலுகைகள் ஜூலை 01, 2015 முதல் தொடர்ந்து வழங்கப்படும். எனினும், இயந்திரங்கள் நிறுவுதலுக்கு உரிய சலுகைகள் Cash Recyclers மற்றும் குறைந்த மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் ATMs-களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.. ஊக்குவிப்புத்தொகை, ஒவ்வொரு இயந்திரத்தின் விலையைத் திருப்பித்தருதல் சார்ந்த உச்சவரம்பிற்கேற்ப, சுற்ற்றிக்கைத் தேதியிலிருந்து அமலாக்கம் செய்யப்பட்டு வழங்கப்படும்.

3. அபராதங்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அது வெளியாகும் வரை. ஊக்குவிக்கும் சலுகைகள் மற்றும் அபராதங்கள் குறித்த திட்டங்கள் கீழ், குற்றங்களுக்கு அபராதங்கள் வழங்குதல் ஜூலை 01, 2014 தேதியிட்ட தொகுப்புச் சுற்றறிக்கை எண் G-5/03.39.01/2014-15-ன்படி நடைமுறைப்படுத்தப்படும்..

4. இந்தச் சுற்றறிக்கையை எமது இணையதளமான www.rbi.org.in -ல் காணலாம்.

இங்ஙனம்

(P. விஜய குமார்)
தலைமைப் பொதுமேலாளர்

இணைப்பு – மேலே குறிப்பிட்டபடி


பொதுமக்களுக்கு வாடிக்கையாளர் சேவை அளிப்பதில் வங்கிக் கிளைகளின் செயல்திறன் சார்ந்த “ரூபாய் நோட்டுகள் விநியோகம் மற்றும் பரிமாற்றம் செய்யும் திட்டம்“ (Currency Distribution & Exchange Scheme – CDES) மீதான சுற்ற்றிக்கை

1. சுத்த நோட்டுகள் கொள்கையின் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றுவதில் சிறந்த வாடிக்கையாளர் சேவையை கரன்ஸி செஸ்ட் உள்ளிட்ட வங்கிக் கிளைகள் அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு ““ரூபாய் நோட்டுகள் விநியோகம் மற்றும் பரிமாற்றம் செய்யும் திட்டம்“,ஏற்படுத்தப்பட்டது.

2. ஊக்குவிப்புகள்

இந்தத் திட்டத்தின்படி, வங்கிகள் ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் பரிமாற்றம் செய்வதற்குக் கீழ்க்கண்ட ஊக்கத்தொகைகள் அவைகளுக்கு அளிக்கப்படும்.

வ.
எண்
சேவையின் தன்மை ஊக்க சலுகைகளின் விவரங்கள்
i) வங்கிகள் இல்லாத, ஒரு இலட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை கொண்ட இடங்களில் கரன்சி செஸ்ட் திறப்பது

அ. மூலதன செலவு

ஒரு கரன்சி செஸ்ட்டுக்கு மூலதன செலவில் 50 சதவிகிதம் ரூ.50 இலட்சம் வரை அளிக்கப்படும். வடகிழக்கு பிரதேசங்களில், மூலதன செலவு 100 சதவிகிதம், ரூ.50 இலட்சம் வரை திருப்பி அளிக்கப்படும்.

ஆ. பிற செலவினங்கள்

முதல் மூன்று வருடங்களுக்கான செலவினங்களில் 50 சதவிகிதம் திருப்பி அளிக்கப்படும். வடகிழக்கு பிரதேசங்களில் முதல் 5 வருடங்களுக்கான செலவினங்களில் 50 சதவிகிதம் திரும்ப அளிக்கப்படும்.

ii) அழுக்கான நோட்டுகள் / பழுதடைந்த நோட்டுகளை வங்கிக் கிளைகளின் முகப்புகளில் மாற்றுவது

அ. அழுக்கான நோட்டுகளை மாற்றுவது

ரூ. 50 மதிப்பிலக்கத்திற்கும் குறைவான மதிப்பிலக்கம் உள்ள நோட்டுகளில், ஒரு பாக்கெட்டுக்கு ரூ.2 வீதம்

ஆ. பழுதடைந்த / கிழிந்த நோட்டுகளை மாற்றுவது

ஒரு நோட்டுக்கு ரூ. 2 வீதம்.

iii) நாணயங்களை முகப்புகளில் பகிர்ந்தளித்தல்
  1. முகப்புகளில் விநியோகம் செய்யப்படும் நாணயங்களுக்கு ஒரு பைக்கு ரூ.25.

  2. இந்த ஊக்குவிப்பித் தொகை வங்கிகள் கோரிக்கையின்றியே கரன்சி செஸ்ட்டிலிருந்து பெறும் நாணயங்களின் அடிப்படையில் வழங்கப்படும்.

  3. வங்கிகள் நாணயங்களை மொத்தமாக இல்லாமல், சிறு தொகைகளாக, சிறு வாடிக்கையாளருக்கு, பகிர்ந்தளிக்கப்படுவதை உறுதிசெய்ய முறைமையை ஏற்படுத்த வேண்டும்.

  4. ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலம், கரன்சி செஸ்ட் ஆய்வு மற்றும், மறைமுகமாக அதிகாரிகளை சோதனைக்கு அனுப்பி அவற்றின் மூலமாக நாணயங்கள் விநியோகத்தை சோதித்து பார்த்திடும்.

iv)

பணம் சம்பந்தமான சில்லரை சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்க அமைக்கப்படும் இயந்திரங்கள்.

1. பணம் ஏற்கும்/ அளிக்கும் இயந்திரம்.

2. ரூ.100 வரை மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் ATM இயந்திரங்கள்.

குறிப்பு – ரூ. 500 அதற்கு மேல் மதிப்புள்ள நோட்டுகளை வழங்கும் இயந்திரங்கள் இந்த வசதிக்குத் தகுதியானவை அல்ல.

இந்த இயந்திரங்களுக்கு திருப்ப அளிக்கப்படும் அதிகமான தொகை கீழ்வருமாறு.

மாநகர / நகர்ப்புற பகுதிகள்

1. பணம் ஏற்கும்/ அளிக்கும் இயந்திரங்கள்:

இயந்திர மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது ரூ.2,00,000 எது குறைவானதோ அது.

2. ரூ.100 வரை சிறு மதிப்பிலக்க நோட்டுகளை அளிக்கும் ATMகளுக்கு:

இயந்திர மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது ரூ.2,00,000 எது குறைவானதோ அது.

நகர்ப்புற / கிரமப்பற பகுதிகள்

1. பணம் ஏற்கும்/ அளிக்கும் இயந்திரங்கள்:

இயந்திர மதிப்பில் 60 சதவிகிதம் அல்லது ரூ.2,50,000 எது குறைவானதோ அது.

2. ரூ.100 வரை சிறு மதிப்பிலக்க நோட்டுகளை அளிக்கும் ATMகளுக்கு:

இயந்திர மதிப்பில் 60 சதவிகிதம் அல்லது ரூ.2,50,000 எது குறைவானதோ அது.

3. ஊக்கத்தொகை பெறுவதற்கு செயல்முறை வழிகாட்டிகள்

3.1. செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை

i. ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறையில் பெறப்படும் அழுக்கு நோட்டுகளுக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். வங்கிகள் இதனைத் தனியாகக் கோர வேண்டியதில்லை. கரன்சி செஸ்ட் கிளை ஊக்கத்தொகையைத் தொடர்புடைய கிளைகளுக்கு, அவை வழங்கும் அழுக்கு நோட்டுகளுக்கு ஏற்ப பிரித்து வழங்கும்.

ii. இதேபோல் கிழிந்த நோட்டுகள் ரெமிட்டன்ஸுடன் பெறப்படுவதற்கு ஏற்ப / அல்லது தனியாக ரிஜிஸ்ட்ர்டு / இன்சூர்டு போஸ்ட்டில், சீல்டு கவரில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவதற்கு ஏற்ப, ஊக்கத்தொகை வழங்கப்படும். வங்கிகள் தனியாகக் கோரவேண்டாம்.

3.2. இயந்திரங்களை அமைப்பதற்கான ஊக்கத்தொகை

(i) ஒவ்வொரு வருடமும் ஜூலை 01 முதல் ஜுன் 30 வரை பல்வேறு இயந்திரங்களை வாங்க முடிவுசெய்யும் வங்கிகள் அவற்றின் விரிவான விவரங்களையும் விலையையும் ஆண்டுத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15-க்குள் ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு தொடர்ந்து அனுப்பவேண்டும். வழங்கல் துறை, திட்டம் கிடைத்தவுடன் அதற்கு உரிய அங்கீகரிக்கப்பட்ட அதிகமான ஊக்கத் தொகையை வங்கிகளுக்கு அறிவுறுத்தும்.

ஒரு தனி ஏற்பாடாக, ஜூலை 01, 2016 முதல் ஜுன் 30, 2017 வரையான வரும் வருடத்திற்கு உரிய திட்டங்கள் மே 31, 2016-க்கு சமர்ப்பிக்கப்படலாம்.

ஜூலை 01, 2015 முதல் ஜுன் 30, 2016 வரை நடப்பு ஆண்டிற்குரிய இயந்திரங்கள் வாங்குவதற்கான தங்கள் திட்டங்களை, வங்கிகள் ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு மே 31, 2016-க்குள் தனியாக அனுப்பவேண்டும்.

(ii) பணம் ஏற்கும்/ அளிக்கும் இயந்திரங்கள் / குறைந்த மதிப்பிலான நோட்டுகளை வழங்கும் ATM-கள் இவற்றை நிறுவுவதற்கான திட்டங்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு அந்த காலாண்டு முடிந்த 30 நாட்களுக்குள், வங்கியின் லிங்க் அலுவலகம் மூலம் அனுப்பவேண்டும். இயந்திர விற்பனையாளருக்கு முழுத் தொகையும் வழங்கப்பட்ட பின்பே, கோரப்பட்ட ஊக்கத் தொகைக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்