Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 16/01/2001

உள்ளுர்ப்பகுதி வங்கி

உள்ளூர்ப்பகுதி வங்கி (LAB) (உபவ)

இந்திய ரிசர்வ் வங்கி

ஊரகத்திட்டமிடல் மற்றும் கடன் வழங்குதுறை

மத்திய அலுவலகம்

மும்பை

 

1. உள்ளூர்ப்பகுதி வங்கி ஒன்றினை அமைப்பதற்கு விண்ணப்பிப்பதற்க முன்னதாகவே குழுமங்கள் பதிவாளர் (Registrar of Companies) அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியமா? இல்லையெனில் உள்ளூர்ப்பகுதி வங்கி விண்ணப்ப படிவத்தில் அக்குறிப்பிட்ட பகுதியில் என்ன குறிப்பிட வேண்டும்?

 அவசியமில்லை உள்ளூர்ப்பகுதி வங்கி (LAB) அமைக்க விண்ணப்பிப்பதற்கு முன்னதாகவே அக்குழுமத்தை குழுமங்கள் பதிவாளர். ROCவிடம் பதிவு செய்ய வேண்டியதில்லை. கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது எனும் அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய பின்னரே மேம்பாட்டாளர்கள் கு.ப.வை அணுக வேண்டும். அந்நிலையில் பொருந்தாது எனும் தகவலை மேம்பாட்டளர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் அவர்கள் ஏற்கனவே ஒரு பெயரை அவ்வங்கிக்குத் தேர்ந்தெடுத்திருப்பின் முன்மொழிந்த அப்பெயரை XYZ உள்ளூர்ப்பகுதி வங்கி வரையறை செய்யப்பட்டது (முன்மொழியப்பட்டது) எனக் குறிப்பிட வேண்டும்

 

2. விண்ணப்பம் அளிக்கப்படும்போது குழும வாரியத்தின் இயக்குநர்களின் பெயர்கள், தொடர்புடைய ஏனைய விபரங்களையும் தலைமை நிருவாக அலுவலர் பெயரையும் தெரிவிக்கவேண்டியது கட்டாயமா? இல்லையெனில் உள்ளூர்ப்பகுதி வங்கி விண்ணப்பத்தின் இவை தொடர்பான பகுதிகளில் குறிப்பிட வேண்டியவை யாவை?

கட்டாயமில்லை முன் மொழியப்பட்ட உள்ளூர்ப்பகுதி வங்கி வாரிய இயக்குநர்கள் பற்றிய விபரங்கள், கொள்கை அளவில் ஏற்கப்பட்டது எனும் அனுமதி கிடைக்கப்பெற்றபின் இந்திய ரிசர்வ் வங்கியின் ஏற்புமைக்கு அனுப்பும்போது அளித்தால்போதும்.

 

3. விண்ணப்பத்திலுள்ள ஏனைய பகுதிகளுக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டியது அவசியமா?

 ஆம். விண்ணப்பத்தில் உள்ள ஏனைய கேள்விகளுக்கு அவசியம் தகவல்களை அளிக்கவேண்டும் இல்லையெனில் அவ்விண்ணப்பத்தை ஏற்காமல் தவிர்க்க வாய்ப்புண்டு.

 

4. விண்ணப்பத்தோடு சேர்க்கப்பட வேண்டிய ஏனைய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் யாவை?  

விண்ணப்பத்தின் பின்இணைப்பில் குறிப்பிடப்பட்ட தகவல் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை விண்ணப்பத்தோடு இணைத்து அளிக்க வேண்டும்.

 

5. செயல்திட்டம் குறித்து வகுத்துரைக்கப்பட்ட படிவமுறை எதையும் பின்பற்ற வேண்டுமா? செயல்திட்டம் மற்றும் விண்ணப்பத் தொகுப்பு எத்தனை நகல்கள் அனுப்பப்பட வேண்டும்?

 செயல்திட்டம் குறித்து வகுத்துரைக்கப்பட்ட படிவமுறை ஏதுமில்லை எனினும் உள்ளூர்ப்பகுதி வங்கி முன்மொழிதலில் செயல்படப் போகும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களின் பல்வேறு விபரங்கள், கடன் இடைவெளி குறித்த ஒவ்வொரு மாவட்டத்தின் மதிப்பீடு, தற்போதுள்ள வங்கி வசதிகள், மாவட்டங்களில் தொழில் ரீதியான வாய்ப்பாற்றல் நிலை, தொழில் திட்டம், செயல்படவிருக்கும் வங்கியின் ஐந்து ஆண்டுகளுக்கான தொழில் திட்ட ஏற்பாடு, மற்றும் முன் கூட்டி எதிர்நோக்கும் ஐந்தொகை ஆவணங்கள் இலாப நட்ட கணக்குகள், தொழில்திட்ட ஏற்பாடு, செயல் வீச்சு, வெற்றி வாய்ப்பு குறித்த ஆய்வறிக்கை தொடர்பான பல்வேறு ஊகங்கள் ஆகியன செயல்திட்டப் படிவத்தில் இடம் பெறத்தக்கன.

மேம்பாட்டாளர்கள் இந்திய ரிசர்வ் வங்கிக்கு நகலுடன் கூடிய விண்ணப்பம், இரண்டு பிற்சேர்க்கை இணைப்புகள், இரண்டு செயல்திட்ட அறிக்கைகள் ஆகியவற்றை அனுப்ப வேண்டும்.

 

6. உள்ளூர்ப்பகுதி வங்கியின் செயல்பரப்பு மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அமையலாமா?

 இது தொடர்பாக எவ்விதத் தடையுமில்லை. ஆனால் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று மாவட்டங்கள் புவியியல் பரப்பில் அடங்கக் கூடியனவா எடுத்தல் வேண்டும்.

 

7. எல்லா மாவட்டங்களும் வங்கிச் செயலாக்கப் பரப்புகள் எனும் தகுதியைப் பெறுமா?

 பின்தங்கிய மிகக் குறைந்த மேம்பாடுடைய மாவட்டங்கள் மட்டுமே உள்ளூர்ப்பகுதி வங்கியின் செயலாக்க பரப்புகள் என ஏற்கப்படுகின்றன. மாநிலத் தலைநகர் உள்ள மாவட்டங்கள், மாநகரங்கள், பெருமளவு தொழில் மேம்பாடுடைய நகரங்கள் ஆகியன இத்தகுதியைப் பெறுவதில்லை.

 

8. மேம்பாட்டாளர்கள் தொடக்க முதலீடாக ரூ. 2 கோடி செலுத்தி (குறைந்த பட்சம் 40 முன் செலுத்தும் முதலீடு) பாக்கி 3 கோடிக்கு வங்கி தொடங்கு முன்னதாக பொதுபங்குமுறை மூலம் பணம் திரட்டலாமா?

 மேம்பாட்டளர்கள் அவர்களது சரிபார்த்து ஏற்கத்தக்க சொந்த ஆதார நிதியிலிருந்து பெறப்பட்ட தொகையைக் கொண்டே குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையான ரூ. 5 கோடியைச் செலுத்த வேண்டும். இது கட்டாயமான தேவை. பட்டயக் கணக்காளர் முறையாகச் சரிபார்த்து சான்றளித்த கணக்கின் அடிப்படையிலான மேம்பாட்டளர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். உள்ளூர்ப்பகுதி வங்கி உரிமம் பெறுவதற்காக மேம்பாட்டாளர்களது தாங்கள் திரட்டிய குறைந்தபட்ச முதலீடான ரூ. 5 கோடிக்குரிய நிதி ஆதாரங்கள் தொடர்பான கணக்காயர் சான்றிதழ், ஆவணச் சான்றுகள் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

 

9. தொடக்க முதலீடான ரூ. 5 கோடியையோ அல்லது அதன் பெரும்பகுதியையோ ஒரே குடும்பத்தினர் வழங்கலாமா?

 உள்ளூர்ப்பகுதி வங்கிக்கு வழங்கப்படும் மொத்த முதலீட்டில் 40 விழுக்காடு தொகைக்கு உட்பட்டே ஒரு குடும்பத்தினர் முதலீடு செய்யலாம். பலதரப்பட்ட பங்குதாரர்களிடமிருந்து முதலீடு பெறுவதற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.

 

10. மேம்பாட்டாளர்கள் தங்கள் பங்குகளை எந்த நேரத்திலும் பிறருக்கு மாற்றித் தரலாமா?

 மேம்பாட்டாளர்கள் மொத்த பங்களிப்புத் தொகையும் (நண்பர்கள் உறவினர்கள் பங்களிப்பு உட்பட) உரிமம் பெற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் உள்ளே வைத்து பூட்டப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. மேலும் 40 விழுக்காடு தொகை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அதே போன்று இருப்பிலே இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக அது குறித்த மறு ஆய்வு மேற்கொள்ளும் வரை பங்குகளை மாற்றித் தருவதில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன

.

11. உள்ளூர்ப்பகுதி வங்கிகள் தங்கள் கிளைகளை நகர்ப்புறங்களில் தொடங்கலாமா?

உள்ளூர்ப்பகுதி வங்கிகள் ஊரக மற்றும் ஓரளவு நகர்ப்புறப் பகுதிகளில் அவர்களது கிளைகளைத் தொடங்கலாம். எனினும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான மையங்களில் கிளை தொடங்க அனுமதி உண்டு.

 

12. உள்ளூர்ப்பகுதி வங்கி அமைக்க இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் உள்ளனவா?

இந்திய ரிசர்வ் வங்கியின் 24 ஆகஸ்ட், 1996 நாளிட்ட அச்சக வெளியீட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.

 

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்