Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (187.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 17/09/2019
பத்மஸ்ரீ Dr. விட்டல் ராவ் விகே பாட்டீல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், நாசிக், மகாராஷ்டிரா - வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) – இன் கீழ் உள்ள வழிகாட்டு உத்தரவுகளின் நீட்டிப்பு

செப்டம்பர் 17, 2019

பத்மஸ்ரீ Dr. விட்டல் ராவ் விகே பாட்டீல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், நாசிக்,
மகாராஷ்டிரா - வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) – இன் கீழ் உள்ள
வழிகாட்டு உத்தரவுகளின் நீட்டிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி, பொது மக்கள் நலன் கருதி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) – பிரிவு 35 A துணைப் பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மே 19, 2018 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து, பத்மஸ்ரீ Dr. விட்டல் ராவ் விகே பாட்டீல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், நாசிக், மகாராஷ்டிரா வங்கியை வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்தது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டு உத்தரவுகளை செப்டம்பர் 18, 2019 முதல் மார்ச் 17, 2020 வரை மேலும் ஆறு மாத காலத்திற்கு மறு ஆய்வுக்குட்பட்டு நீட்டித்துள்ளது. ஆர்வமுள்ள பொது மக்களின் பார்வைக்காக இந்த வழி காட்டு உத்தரவுகளின் நகல் வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கி சூழ்நிலைகளை பொறுத்து உத்தரவுகளில் மாற்றங்களை பரிசீலிக்கலாம். வழிகாட்டு உத்தரவுகளை வழங்கியதால், இந்திய ரிசர்வ் வங்கி வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாகக் கருதகூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வங்கியின் வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/717

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்