Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (187.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 26/06/2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949(AACS) பிரிவு 35அ இன் கீழ் வழிகாட்டு உத்தரவுகள் – சிகேபி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா

ஜூன் 26, 2019

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949(AACS) பிரிவு 35அ இன் கீழ் வழிகாட்டு
உத்தரவுகள் – சிகேபி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா

சிகேபி கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை, மகாராஷ்டிரா ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவின்படி மே 2, 2014 அன்று வர்த்தக முடிவில் இருந்து வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. மேலும் இவ்வுத்தரவுகளின் செல்லுபடி காலம் மறுஆய்வுக்கு உட்பட்டு அவ்வபோது நீட்டிக்கப்பட்டு கடைசியாக மே 30, 2019 தேதியிட்ட அறிவுறுத்தலின்படி ஜூன் 30, 2019 வரை நீட்டிக்கப்பட்டது.

பொது நலனுக்காக இந்திய ரிசர்வ் வங்கி இதன் மூலம் தெரிவிப்பது, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 56 உடன் இணைந்த 35 A பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவ்வபோது மாற்றியமைக்கப்பட்ட, ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட வழிகாட்டு உத்தரவின் செல்லுபடி காலத்தை கடைசியாக ஜூன் 30, 2019 வரை நீட்டித்திருந்த நிலையில், ஜூன் 24, 2019 தேதியிட்ட அறிவுறுத்தலின் படி ஜூலை 01, 2019 முதல் செப்டெம்பர் 30, 2019 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு மறுஆய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கிறது.

ஜூன் 24, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் கவனத்திற்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல்களினால் வங்கியின் நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது.

யோகேஷ் தயால்
 தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3051

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்