Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (264.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 22/02/2019
டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட் நிலங்கா, லாதூர் மாவட்டம், மகாராஷ்டிரா நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவுகளை வெளியிடுகிறது

தேதி: பிப்ரவரி 22, 2019

டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட்
நிலங்கா, லாதூர் மாவட்டம், மகாராஷ்டிரா நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி
உத்தரவுகளை வெளியிடுகிறது.

டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், நிலங்கா, லாதூர் மாவட்டம் , மகாராஷ்டிராவுக்கு பிப்ரவரி 16, 2019ஆம் தேதி வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டுதல் உத்தரவுகளை இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. இவ் உத்தரவுகளின்படி டாக்டர் சிவாஜிராவ் பாட்டீல் நீலங்கேகர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், நிலங்கா, லாதூர் மாவட்டம், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக முன் ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு கடனையும் வழங்க முடியாது அல்லது புதுப்பிக்க முடியாது, எந்தவொரு முதலீடு செய்வதோ, நிதிகளின் மீது கடன் மற்றும் புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், செலவு செய்தல் அல்லது ஏதேனும் கட்டணம் செலுத்துதல், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது வேறு எந்தவொரு சமரச உடன்படிக்கைகள், சொத்துக்களை விற்றல், மாற்றல் ஆகியவற்றை இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளபடியன்றி, மேற்கொள்ள முடியாது. மேலும், ஒவ்வொரு சேமிப்பு வங்கி அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த டெபாசிட் கணக்கிலும் உள்ள மொத்த நிலுவைத் தொகையை 1000 (ரூபாய்க்கு மட்டும்) மிகாத தொகையை வங்கி அதன் வைப்பாளர்களை திரும்பப் பெற அனுமதிக்க முடியும். பிப்ரவரி 16, 2019லிருந்து , ஆறு மாத காலத்திற்கு, அத்தகைய வைப்புத்தொகையாளர் எந்த வகையிலும் வங்கியில் பொறுப்பேற்கிறாரோ, அதாவது கடன் வாங்குபவர் அல்லது ஜாமீன் பெற்றவர் எனில், அந்த தொகை முதலில் சம்பந்தப்பட்ட கடன் கணக்கு / களுக்கு சரிசெய்யப்படலாம்.

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A உப பிரிவு 1-ன் (உடன் பிரிவு 56-ஐயும் படிக்கவும்) கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.

இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு வங்கி, தனது வர்த்தகத்தைத் தொடர்ந்திடும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம்.

அனிருதா டி.ஜாதவ்
உதவி மேலாளர்

செய்தி வெளியீடு: 2018-2019/2009

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்