Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (271.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 05/03/2018
இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மீது பண அபராதம் விதிக்கிறது

மார்ச் 05, 2018

இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்
மீது பண அபராதம் விதிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மீது, பிப்ரவரி 27, 2018 அன்று, உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்களுக்கான (KYC) வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தினால் ரூ. 20 மில்லியன் பண அபராதத்தை விதிக்கிறது. வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் சட்டப் பிரிவு எண் 47A (1) (c) (உடன் இணைந்த பிரிவு 46 (4) (i))-ன்படி, வங்கியால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் / அறிவுறுத்தல்களுக்கு எதிராகச் செயல்பட்டதால், இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பண அபராதத்தை விதிக்கிறது.

இந்த நடவடிக்கை, கட்டுப்பாட்டு விதிகளைக் கடைபிடிப்பதிலுள்ள குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர எந்தவொரு பரிவர்த்தனையின் செல்லுபடியை, அல்லது வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை பாதிக்கும் நோக்கத்தோடு அல்ல.

பின்புலம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஒரு கிளையில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கியின் உட்பரிசோதனை உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்களுக்கான (KYC) அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை பின்பற்றாதது கண்டறியப்பட்டது.. இது தொடர்பாக பெறப்பட்ட தொடர்புடைய ஆவணங்களை மீளாய்வு மற்றும் பரிசோதனையின் கண்டுபிடிப்பின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்களுக்கான (KYC) அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதால் ஏன் தண்டனையை விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பு வழங்கப்பட்டது.

விசாரணையின் முழு உண்மைகளையும், தனிப்பட்ட விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள், நிறுவனத்தின் பதில்களையும் பரிசீலித்தபின், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்/ வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மேற்கூறிய விதிமீறல் குறித்த குற்றச்சாட்டு நிரூபணமானது என்று முடிவு செய்து அபராதம் விதிப்பதற்கான தேவையை RBI உறுதி செய்துள்ளது

(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்

பத்திரிக்கை வெளியீடு –2017-2018/2355
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்