Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (129.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 03/10/2016
இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்ரீ சாய் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், முகெட் மாவட்டம், நந்டேடு, மஹாராஷ்டிராவிற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை டிசம்பர் 31, 2016 வரை நீட்டிக்கிறது

அக்டோபர் 03, 2016

இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்ரீ சாய் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், முகெட் மாவட்டம், நந்டேடு, மஹாராஷ்டிராவிற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை
டிசம்பர் 31, 2016 வரை நீட்டிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, ஸ்ரீ சாய் அர்பன் கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், முகெட் மாவட்டம், நந்டேடு, மஹாராஷ்டிராவிற்கு வழங்கப்பட்ட உத்தவுகளை, மேலும் 3 மாதங்களுக்கு செப்டம்பர் 30, 2016 முதல் (வேலைநேர முடிவிலிருந்து) டிசம்பர் 31, 2016 வரை மறு ஆய்வுக்குட்பட்டு நீட்டிக்கிறது. இந்த வங்கி ஜூலை 01, 2015 முதல் வழிகாட்டி உத்தரவுகளின் கீழ் உள்ளது. இவை முன்னர் 2 முறை 9 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டன.

வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 35 (A) (1)-ன்கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல் உத்தரவுகளை வெளியிட்டது. விருப்பமுள்ள பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இந்த உத்தரவின் நகல் வங்கிக் கட்டிடத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவுகள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி இந்தக் குறிப்பிட்ட வங்கியின் உரிமத்தை ரத்து செய்துவிட்டதாகக் கருதக்கூடாது. இந்த வங்கியின் நிதிநிலை மேம்படும் காலம் வரை, சில கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, வங்கி வர்த்தகங்களை இந்த வங்கி தொடர்ந்து மேற்கொண்டு செயல்படும். சூழ்நிலைக்கேற்ப ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்கள் செய்யக்கருதிடும்.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2016–17/840

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்