Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 01/01/2006

இந்தியாவில் வாழ்வோருக்கு அந்நியச்செலாவணி வசதிகள்

இந்தியாவில் வாழ்வோருக்கு அந்நியச்செலாவணி வசதிகள்(தனி நபர்கள்)

அந்நியச்செலாவணித்துறைவெளிப்புற தொகை செலுத்துதல் பிரிவு

இந்தியாவில் வாழ்வோருக்கு அந்நியச்செலாவணி வசதிகள்

(ஐனவரி 2006இல் உள்ளபடி)

முன்னுரை :

இந்தியாவில் செலாவணி மாற்றத்துக்குரிய நிர்வாகத்தின் சட்ட வடிவம் அந்நியச்செலாவணி சட்டத்தின் கீழ் நடப்புக்கணக்கு பரிமாற்றங்களை மேற்கொள்வதற்காக அந்நியச்செலாவணியை வாங்கவும் விற்கவும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரிசர்வ் வங்கியின் ஆலோசனையுடன் நடப்புக்கணக்குப் பரிமாற்றங்களில் காரணத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. அதன்படி அரசு அறிவிக்கை GSR.381(E) மே.3, 2000 நாளிட்டது, S.O. 301(E) மார்ச் 30, 2001 நாளிட்டது அவ்வப்போது மாற்றுதலுக்குரியது, கடைசி மாற்றுதலைப் பார்க்க அறிவிக்கை எண் GSR.608(E) செப்டம்பர் 13, 2004 நாளிட்டது, பொது நலனுக்கென நடப்புக்கணக்குப்பறிமாற்றங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்து இந்த அறிவிக்கைகளை வெளியிட்டது.

இதைப்பற்றிய விவரங்கள் வங்கியின் இணையதளங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களிடமும், அந்நியச் செலாவணித் துறையின் வட்டார அலுவலகங்களிலும் கிடைக்கும். அத்தகைய அனைத்து கேள்விகளுக்கும் எளிய மொழியில் விடையளிக்க இந்த அ.கே.வி. முயல்கிறது.

அந்நியச்செலாவணி மேலாண்மைச்சட்டம், 1999 (அ.செ.மே.ச) ஜூன் 1, 2000 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தப்புதிய சட்டம் அறிமுகப்படுத்தப் பட்டதனால் (அந்நியச்செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் இடத்தில்) சில அமைப்புமுறை மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது அந்நியச்செலாவணி தொடர்பான அனைத்துப்பரிமாற்றங்களும் மூலதனம் அல்லது நடப்புக்கணக்குப்பரிமாற்றங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் வாழும் ஒருவர் மேற்கொள்ளும் அனைத்துப்பரிமாற்றங்களும் அவருடைய வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் அல்லது பொறுப்புகளில் மாற்றத்தினை ஏற்படுத்தவில்லையெனில் அவை நடப்புக்கணக்குப் பரிமாற்றங்கள் எனப்படும். அந்நியச்செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 5இன்படி, மத்திய அரசு வரையறைப்படுத்தியுள்ள பரிமாற்றங்களைத் தவிர மற்ற அனைத்து நடப்புக்கணக்குப் பரிமாற்றங்களுக்கும், நபர்கள் அந்நியச்செலாவணியைத்தடையின்றி விற்கவோ வாங்கவோ முடியும் (மே 3, 2000 நாளிட்ட அறிவிக்கை எண் GSR. 381 E (அவ்வப்போது மாற்றப்பட்டது பார்க்கவும்). அந்த அறிவிக்கையின் முழு வாசகம் அலுவலக அரசு இதழில் உள்ளது. எங்களது www.mastercirculars.rbi.org.in என்னும் இணைய தளத்தில் பல்பொருள் பற்றிய பணம் செலுத்துதல்பற்றிய மேல்நிலைச் சுற்றறிக்கையினுடைய இணைப்பிலும் உள்ளது.

 

I. பயணம் தொடர்பான வழிகாட்டு நெறிகள்

1. இந்தியாவில் வாழ்வோர் என்பவர் யார் ?

அந்நியச்செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் 1999இன் பிரிவு 2(v) இன்படி இந்தியாவில் வாழும் ஒருவர் என்பதன் பொருள் - முந்தைய நிதி ஆண்டில் இந்தியாவில் 180 நாட்களுக்கு மேல் வாழ்ந்தவர் ஆனால் இது பின்வரும் நபர்களின் விஷயத்தில் பொருந்தாது (அ) இந்தியாவுக்கு வெளியே சென்று விட்ட ஒருவருக்கோ வெளிநாட்டில் தங்கிவிட்டவருக்கோ (பின்வரும் காரணங்களுக்காக)

வேலையை ஏற்றுக்கொள்வதற்காக அல்லது வேலைபார்ப்பதற்கோ, வெளிநாட்டில் ஒரு வியாபாரத்தினையோ அல்லது ஒரு தொழிலையே செய்வதற்காகவோ, வேறு எந்தக்காரணங்களுக்காகவோ, அந்தச் சூழ்நிலையில் இந்தியாவுக்கு வெளியில் குறிப்பிட்ட காலத்துக்குத் தங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் நிலையில்.

(ஆ) இந்தியாவுக்கு வந்த ஒருவர் அல்லது தங்கியுள்ள ஒருவர், இரண்டு நிலையிலும் பின்வரும் நிலையிலுள்ளவர்களைத் தவிர

ஒருவேலையை மேற்கொள்ள அல்லது வேலைசெய்வதற்கு இந்தியாவுக்கு வரும் ஒருவர்

இந்தியாவில் ஒரு வியாபாரத்தை நடத்த அல்லது ஒருதொழிலைச்செய்ய வேறு எந்த காரணங்களுக்காகவோ, அந்தச் சூழ்நிலையில் அவரது எவ்வளவு காலம் என்று தெரியப்படாத நிலையில் தங்குபவர். எந்த ஒரு நபரோ அல்லது இந்தியாவில் தொடர்புடைய அல்லது பதிவு செய்துள்ள நிறுவன அமைப்போ. ஒரு அலுவலகம், கிளை அல்லது முகமையை இந்தியாவில் வைத்துள்ள (இந்தியாவிற்கு வெளியில் வாழும் ஒருவருக்குச்சொந்தமானது). இந்தியாவில் வாழும் ஒருவருக்குச்சொந்தமான, அவரால் கட்டுப்படுத்தப்படும் இந்தியாவுக்கு வெளியில் உள்ள ஒரு அலுவலகம், கிளை அல்லது முகமை.

 

2. அந்நியச்செலாவணியை எங்கே வாங்கமுடியும் ?

அந்நியச்செலாவணியை எந்த அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடமிருந்தும் வாங்கலாம். அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் மட்டுமல்லாமல் முழுத்தகுதிபடைத்த பணம் மாற்றுவோரும் வியாபாரத்துக்காக அல்லது தனிப்பட்ட பயணங்களுக்காக அந்நியச்செலாவணியை அளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

3. அங்கீகரிக்கப்பட்ட வணகர் என்பவர் யார் ?

ரிசர்வ் வங்கியால் அந்நியச்செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் 1999 பிரிவு 10(i) ன்படி அந்நியச்செலாவணியையோ அல்லது அந்நியப் பத்திரங்களையோ புழங்குவதற்கு ரிசர்வ் வங்கியால் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் (பட்டியல் www.fedai.org.in இல் உள்ளது).

 

4. ஒரு வணிகப்பயணத்துக்கு எவ்வளவு அந்நியச்செலவாணி கிடைக்கும் ?

நேபாளம், பூடான் தவிர வேறு எந்த நாட்டுக்கும் ஒரு வணிகப்பயணம் மேற்கொள்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் அமெரிக்க டாலர் 25,000/- வரை விடுவிக்க முடியும். வணிகநோக்கங்களுக்காக வெளிநாட்டுப்பயணம் (நேபாளம், பூடான் தவிர) மேற்கொள்வோர் 25,000/- டாலருக்கு மேல் அந்நியச்செலாவணி பெறவேண்டும் என்று விரும்பினால் அவர்கள் அங்கே தங்கும் காலம் எவ்வளவாக இருப்பினும், அதற்கு ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியைப்பெற வேண்டும். பன்னாட்டு மாநாடுகளில் பங்குபெறல், கருத்தரங்குகளில் கலந்துகொள்ளல், சிறப்புப்பயிற்சி பெறல், கல்விச்சுற்றுலா, தொழிற்பயிற்சி போன்றவை வணிகப்பயணங்காளாகக் கருதப்படுகின்றன. மருத்துவச்சிகிச்சை பெறுவதற்கும், மருத்துவச்சோதனை செய்து கொள்வதற்கும் மேற் கொள்ளப்படும் பயணங்களும் வணிகப்பயணம் என்னும் பிரிவில் அடங்கும். நேபாளம், பூட்டான் நாட்டிலுள்ள நபர்களுடன் பரிமாற்றத்துக்கோ அந்நியச்செலாவணி விடுவிக்கப்படுவதற்கு அனுமதி இல்லை என்பது இத்துடன் நினைவில் கொள்ளத்தக்கது.

 

5. இந்தியாவுக்கு வெளியே மருத்துவச்சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒருவர் அதிகப்படியான அந்நியச்செலாவணியைப்பெறமுடியுமா ?

இந்தியாவிலிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ மருத்துவமனை / மருத்துவரிடமிருந்து மதிப்பீடு தேவை என்று வலியுறுத்தாமல் ஒருவர் தன்னளவில் உறுதியளிக்கும் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள் 1,00,000/- அமெரிக்க டாலர்வரை அந்நியச்செலாவணியை விடுவிக்கலாம். வெளிநாட்டுக்கு மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லும் ஒருவர் இந்திய /வெளிநாட்டு மருத்துவரிடமிருந்து /மருத்துவ மனையிலிருந்து மதிப்பீட்டு அறிக்கையுடன் வேண்டுகோள் விடுத்தால் மேலே குறிப்பிட்ட எல்லைக்கும் அதிகமாக அந்நியச்செலாவணியைப்பெற முடியும். இந்த அந்நியச் செலாவணி மருத்துவச்சிகிச்சையோடு தொடர்புடைய செலவுகளுக்கானது. மேலும் பத்தி 1இல் குறிப்பிட்டப்பட்ட தொகைக்குக் கூடுதலான தொகையாகும்.

 

6. வெளிநாட்டில் கல்வி பெறுவதற்குரிய அந்நியச்செலாவணி எவ்வளவு ?

வெளிநாட்டில் கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களாகக் கருதப்படுவர். அந்நியச்செலாவணி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குரிய எல்லா வசதிகளும் இவர்களுக்கும் உண்டு. தங்கள் பராமரிப்புச்செலவுகளுக்காக, தன்னளவில் உறுதியளித்து நெருங்கிய உறவினர்களிடமிருந்து அமெரிக்க டாலர் 1,00,000 வரை பெறமுடியும். இது அவர்கள் படிப்புக்காகச்செலுத்தும் பணத்தையும் உள்ளடக்கியது. இந்தியாவில் வாழும்போது பெற்ற கல்விக்கடன்களும், பிற கடன்களும் தொடர்ந்து பெற அனுமதிக்கப்படும். மாணவர்கள் கல்விதொடர்பாகப்பெற்ற கடன்களைத் திரும்பச்செலுத்துதலில் இப்போதுள்ள நடைமுறையில் தளர்வுகள் எதுவும் இல்லை.

 

7. ஒருவர் இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டுக்கு தனிப்பட்ட பயணம் செய்யும் போது எவ்வளவு அந்நியச் செலாவணியைப் பெறமுடியும் ?

ஒருவர் தனிப்பட்ட வெளிநாட்டுப்பயணத்துக்கு (எ.கா.) சுற்றுலா போன்றவற்றுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடமிருந்து அமெரிக்க டாலர் 10,000 வரை பெறமுடியும். இந்த 10,000 அமெரிக்க டாலர் என்பது ஒருங்கிணைந்தது. இந்த ஒருங்கிணைந்த அந்நியச்செலாவணி ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு நாட்காட்டி ஆண்டில் மேற்கொள்ளும் பயணத்துக்கு உரியது. இது 10,000 அமெரிக்க டாலருக்கு மிகாமல் இருக்க வேண்டும் (இந்த வசதி முன்ன்ர் B.T.O. அல்லது F.T.S. என்று அழக்கப்பட்டது. இந்த அந்நியச்செலாவணியாகிய 10,000 அமெரிக்க டாலர் என்பது வேலைபார்ப்பது, குடியேற்றம், கல்வி போன்ற எந்த நோக்கங்களுக்காகவும் பயணம் மேற்கொள்வதற்கு அளிக்கப்படும் அந்நியச்செலாவணியுடன் கூடுதலாக அளிக்கப்படும். எனினும் நேபாளம், பூடான் ஆகிய வெளிநாடுகளுக்குச்செல்வதற்கு அந்நியச்செலாவணி கிடையாது.

 

8. வேலைக்காக வெளிநாட்டுக்குச்செல்லும் ஒருவருக்கு எவ்வளவு அந்நியச்செலாவணி கிடைக்கும் ?

தன்னளவில் உறுதிமொழி அளிப்பதன் பேரில் வேலைக்காக வெளிநாட்டுக்குச் செல்லும் ஒருவர் 1,00,000 அமெரிக்க டாலரை எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடமிருந்தும் பெறமுடியும்.

 

9. குடியேற்றத்துக்காக வெளிநாட்டுக்குச்செல்லும் ஒருவருக்கு எவ்வளவு அந்நியச்செலாவணி கிடைக்கும் ?

குடியேற்றத்துக்காக வெளிநாட்டுக்குச்செல்லும் ஒருவர் தன்னளவில் உறுதிமொழி அளிப்பதன் பேரில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடமிருந்து 1,00,000 அமெரிக்க டாலர் வரை அந்நியச்செலாவணியைப்பெற முடியும். இந்தச்செலவு குடியேற்றத்தினைத்தொடரும் போது நிகழும் உடனிகழ்வுச் செலவுகளை மேற்கொள்வதற்கே. இந்தப்பணம் குடியேற்றத்துக்குரிய புள்ளிகளையோ அல்லது தகுதிகளையே பெறுவதற்கு உரியது அல்ல. அத்தகைய அனைத்துத் தேவைகளுக்கும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவைப்படுகிறது.

 

10. எந்த வகைப்பயணத்துக்காகவது ரிசர்வ் வங்கி அல்லது இந்திய அரசின் முன் அனுமதி தேவைப்படுகிறதா ?

வெளிநாட்டில் பண்பாட்டுச்சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பும் நடனக்குழுக்கள், கலைஞர்கள் ஆகியோர் மனிதவளமேம்பாட்டு அமைச்சகம், இந்தி அரசு, புதுடில்லியிடம் முன் அனுமதியைப் பெறவேண்டும்.

 

11. வெளிநாட்டுப்பயணத்துக்கு அந்நியச்செலாவணி பெறும்போது எவ்வளவு அந்நியச்செலாவணியை அந்நியப்பணத்தாள்களாகப் பெறமுடியும் ?

பயணிகள் 2000 அமெரிக்க டாலர் வரை மட்டுமே அந்நியப்பணத்தாள்கள்/நாணயங்கள் பெறமுடியும். மீதித் தொகையினை பயணிகள் காசோலை வடிவிலோ அல்லது வங்கிவரைவோலை வடிவிலோ கொண்டு செல்லலாம். இதில் உள்ள விதிவிலக்குகள் (அ) ஈராக், லிபியா போன்ற நாடுகளுக்குச்செல்வோர் 5000 அமெரிக்க டாலர்களுக்கு மிகாமல் அந்நியப்பணத்தாள்கள்/நாணயங்கள் வடிவில் அந்நியச் செலாவணியைக் கொண்டு செல்ல முடியும் (ஆ) ஈரான் இஸ்லாமியக்குடியரசு, ரஷ்யாக் கூட்டமைப்பு, பிற சுதந்திர நாடுகளின் காமன்வெல்த் குடியரசுகள் ஆகியவற்றுக்குச்செல்வோர் முழுஅந்நியச்செலாவணியையும் அந்நியப் பணத்தாள்கள்/ நாணயங்கள் வடிவில் கொண்டுசெல்ல முடியும்.

 

12. வெளிநாட்டில் கல்விக்காகச் செல்வோருக்கும் இதே விதிகள் பொருந்துமா ?

கல்விக்காக வெளிநாடு செல்வோருக்கு பராமரிச்செலவுக்காக அந்நியச்செலாவணி (அ) பணத்தாள்களாக 2000 அமெரிக்க டாலர்களும் (ஆ) மீதித்தொகை வெளிநாட்டில் பணமாகப்பெறத்தக்க பயணிகள் காசோலையாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ எடுத்துச் செல்லலாம்.

 

13. வெளிநாட்டுப்பயணத்துக்காக எவ்வளவு காலம் முன் கூட்டியே அந்நியச்செலாவணியைப் பெறலாம் ?

எந்த நோக்கத்துக்காகவும் பெறப்படும் அந்நியச்செலாவணி வாங்கிய 60 நாள்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும். 60 நாட்களுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றால் அதனை அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடம் திரும்பச்செலுத்த வேண்டும்.

 

14. வெளிநாட்டுப்பயணத்துக்காக வாங்கப்படும் அந்நியச்செலாவணி முழுவதற்கும் அதற்கு ஈடான பணத்தினை ரூபாயாகச்செலுத்தலாமா?

வங்கிகளில் ரூ.50,000/- வரை பணத்தினை ரூபாயாகச் செலுத்தி அந்நியச்செலாவணிப் பெறமுடியும். எனினும் ஈடான தொகை ரூ.50,000/-க்கு அதிகமானால் முழுத்தொகையையும் அதனைக் குறுக்குக்கோடிட்ட காசோலை/வங்கி காசோலை/பணம் செலுத்து ஆணை/கேட்பு வரைவோலை ஆகியவை மூலமே செலுத்தவேண்டும்.

 

15. இந்தியாவுக்கு திரும்பிய பயணி அந்நியச்செலாவணியினைத் திருப்பிச்செலுத்த காலவரையறை ஏதும் உள்ளதா ?

வெளிநாட்டு பயணம் சென்றுதிரும்பிய பயணிகள் செலவிடப்படாத அந்நியச்ச்செலாவணி பணத்தாள்களை 90 நாள்களுக்குள்ளும், பயணிகள் காசோலையை 180 நாள்களுக்குள்ளும், திருப்பிச்செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் 2000 அமெரிக்க டாலர் வரை அந்நியச்செலாவணியை வெளி நாட்டுப் பணத்தாள் வடிவிலோ அல்லது பயணிகள் காசோலை வடிவிலோ எதிர்கால பயன்பட்டுக்காக அல்லது அவர்களுடைய RFC (உள்நாட்டு) கணக்கில் எல்லையில்லாமல் வரவுவைக்கவோ வைத்துக்கொள்ள உரிமை உண்டு.

 

16. இந்தியாவுக்கு திரும்பியோர் அந்நியச்செலாவணியைத் தங்களிடமே வைத்துக் கொள்ள முடியுமா ?

இந்தியாவில் வாழ்வோர் 2000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு ஈடான அந்நியப்பணத்தினைத் தங்களது RFC (உள்நாட்டு)க் கணக்கில் எந்த விதக்கால எல்லையுமின்றி வைத்துக்கொள்ள முடியும். அந்த அந்நியச் செலாவணிப் பணம் அவரால் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.

அ) வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டபோது செய்யப்பட்ட சேவைகளுக்குரிய பணம் இந்தியாவில் செய்யப்பட்ட எந்த வணிகத்துக்கும் அல்லது எந்தச்செயலுக்கும் உரிய பணமாக இருத்தல் கூடாது.

ஆ) இந்தியாவில் வாழும் ஒருவரிடமிருந்தோ அல்லது இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஒருவரிடமிருந்தோ பெறாத மதிப்பூதியம் அல்லது பரிசு அல்லது சேவைக்குரிய செலுத்துகை அல்லது சட்டபூர்வமான உடன்படிக்கைக்குரிய தீர்வுக்கட்டணம்.

இ) இந்தியாவுக்கு வெளியே பயணம் செய்யும் போது எந்த இடத்திலிருந்தும் பெறப்பட்ட மதிப்பூதியம் அல்லது பரிசு.

 

ஈ) வெளிநாட்டுப் பயணத்துக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட நபரிடமிருந்து பெற்றதும் அதிலிருந்து செலவு செய்யப்படாததும் ஆகிய அந்நியச்செலாவணி.

 

17. வெளிநாட்டு நாணயங்களையும் அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடம் ஒப்படைக்க வேண்டும் ?

இந்தியாவில் வாழ்வோர் வெளிநாட்டு நாணயங்களை வைத்துக்கொள்வதில் தடைகள் எதுவும் இல்லை.

 

18. இந்தியாவுக்கு வெளியில் வாழும் ஒருவருக்கு பரிசாக/நன்கொடையாக எவ்வளவு அந்நியச்செலாவணியை அனுப்பலாம் ?

வெளிநாட்டிலுள்ள ஒரு நபருக்கு பரிசாகவோ அல்லது தருமஸ்தாபனங்கள் / கல்வி / சமய / பண்பாட்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாகவே 5000 அமெரிக்க டாலர் வரை இந்தியாவில் வாழும் ஒரு நபர் அனுப்பலாம். இந்தத்தொகையை விட அதிகமாக அனுப்ப ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியைப்பெற வேண்டும்.

 

19. அந்நியச்செலாவணிப்பரிமாற்றத்துக்கு பன்னாட்டுக்கடன் அட்டையைப் பயன் படுத்துவதற்கு அனுமதி உண்டா ?

வெளிநாட்டு இதழ்களுக்குச் சந்தாசெலுத்துதல், இணையதளச் சந்தா போன்றவை பல வித நோக்கங்களுக்காகச்செல்லும் வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவற்றுக்காக சொந்த செலவுக்கான தொகைக்காக ஒருவர் பன்னாட்டுக்கடன் அட்டைகள்(ICCS) / எந்நேரமும் பணம் பெறும் அட்டை/ பற்று அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பன்னாட்டு கடன் அட்டையைப் பயன்படுத்தி உங்களது அந்நியச் செலாவணி செலுத்தும் எல்லை உங்களுக்கு கடன் அட்டை வழங்கும் நிறுவனம் குறிப்பிட்ட கடன் எல்லைக்கு உட்பட்டதாகும். பன்னாட்டு கடன் அட்டையைப்பயன்படுத்தி (அ) செலவு செய்யலாம் / வெளிநாட்டிலிருக்கும் போது பொருட்கள வாங்கலாம் (ஆ) இந்தியாவில் இருந்து புத்தகங்களும் வேறுபொருள்களும் வாங்குவதற்கு அந்நியச்செலாவணியில் பணம் செலுத்தலாம். இந்தியாவில் நீங்கள் ஒரு வெளிநாட்டுப் பணக்கணக்கு வைத்திருந்தால் நீங்கள் கடல்கடந்த நாடுகளின் வங்கிகள், புகழ்வாய்ந்த முகமைகள் போன்றவற்றின் பன்னாட்டுக்கடன் அட்டைகளையும் பெறலாம்.

 

20. இந்தியாவுக்கு வரும்போது எவ்வளவு இந்தியப்பணத்தைக் கொண்டு வரலாம் ?

வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் ஒரு நபர் கீழே கொடுக்கப் பட்டுள்ள எல்லைகளுக்குள் இந்தியப்பணத்தினைக் கொண்டு வரலாம்.

(அ) நேபாளம், பூட்டான் தவிர பிற ஏந்த நாடுகளிலிருந்தும் ரூ.5000/- வரை கொண்டுவரலாம்.

(ஆ) நேபாளத்திலிருந்தும் பூட்டானிலிருந்தும் ரூ.100/-க்கு மிகாத எந்தத்தொகையும்.

 

21. வெளிநாட்டுக்குச்செல்லும் போது ஒருவர் பணமாக எவ்வளவு அந்நியச்செலாவணியை எடுத்துச்செல்லலாம் ?

இந்தியாவில் வாழ்வோர் அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடமிருந்தோ அல்லது பணம்மாற்றுவோரிடமிருந்தோ அந்நியச்செலாவணிச்சட்டத்தின்படி அந்நியச்செலாவணியை எடுத்துச்செல்வதற்குத்தடை எதுவும் இல்லை. எனினும் அவர்கள் அந்த அந்நியச்செலாவணியைப் பணமாகவோ / நாணயங்களாகவே 2000 அமெரிக்க டாலரோ அல்லது அதற்கு ஈடான தொகையையோ மட்டுமே எடுத்துச்செல்ல முடியும். மீதித்தொகையினை பயணியர் காசோலையாகவோ அல்லது வங்கியர் வரைவோலையாகவோ மட்டுமே கொண்டுசெல்ல முடியும். இது பற்றிய விவரத்துக்கு அயிட்டம் 11 ஐப் பார்க்கவும்.

 

22. இந்தியாவுக்கு வரும்போது எவ்வளவு அந்நியச்செலாவணியைக் கொண்டுவரமுடியும் ?

இந்தியாவுக்கு வரும் ஒருவர் எல்லை எதுவும் இன்றி எவ்வளவு அந்நியச்செலாவணி வேண்டுமானாலும் கொண்டுவரலாம். என்னும் ஒருவர் கொண்டுவரும் அந்நியச் செலாவணி பணத்தாள் பயணியர் காசோலைகள் என்ற வகையில் மொத்தமாக 10,000 அமெரிக்க டாலருக்கு அதிகமாகவோ அல்லது அதற்கு ஈடான தொகைக்கு அதிகமாகவோ அல்லது வெளிநாட்டுப்பணத்தாள்கள் 5000 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு அதிகமாகவோ இருப்பின் இந்தியாவில் வந்து இறங்கும் போது விமான நிலையத்தில் விமான நிலைய அதிகாரிகளிடம் பணத்தாள்கள் உறுதிப்பத்திரத்தில் தான் இவ்வளவு வெளிநாட்டுப் பணத்தாள்களைக் கொண்டுவந்துள்ளதாக உறுதியளிக்க வேண்டும்.

 

23. இந்தியாவுக்கு வெளியே ஒரு பரிசுப்பொட்டலத்தை அனுப்பும் போது முழுமையான ஏற்றுமதிச்செயல் முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமா ?

பரிசுப்பொருளாக அனுப்பப்படும் அந்தப்பொருள் வெளிநாட்டு வணிகக்கொள்கையால் தடைசெய்யப்படாததாக இருப்பின், இந்தியாவில் வாழும் ஒருவர் ரூ.5,00,000 மதிப்புக்கு மிகாமல் பரிசுபொருளை அனுப்பலாம் (ஏற்றுமதி செய்யலாம்).

 

24. ஒருவர் வெளிநாடு செல்லும்போது எவ்வளவு தங்க நகைகளை எடுத்து செல்லாம்?

ஒருவர் தனது சொந்த நகையை எடுத்துச்செல்வது பொருட்களை எடுத்து செல்லும் விதிமுறைகளை அனுசரித்து இந்திய அரசினால் வெளிநாட்டுத் தொழில் கொள்கையால் நிருவகிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை.

 

25. இந்தியாவில் வாழ்வோர் வெளிநாட்டில் வாழும் ஒருவருக்கு தங்குமிடம், உணவு போன்ற வசதிகளை வழங்கலாமா ?

வெளிநாட்டில் வாழும் ஒருவர் இந்தியாவுக்கு வரும்போது அவருக்கு இந்தியாவுக்கு வருவதற்கும், இந்தியாவை விட்டுச்செல்வதற்கும், இந்தியாவுக்குள் பயணம் செய்வதற்கும் அவர்தங்கும் இடவசதிக்கும், உணவுக்கும் தொடர்புடைய செலவுகளுக்கும் இந்தியாவில் வாழும் ஒருவர் தடையெதுவும் இல்லாமல் இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம்.

 

26. இந்தியாவைத் தொட்டுச் செல்லாத விமானப் பயணச்சீட்டுகளை இந்தியாவில் வாழ்வோர் வாங்கலாமா ?

இந்தியாவில் வாழ்வோர் எந்த மூன்றாவது நாட்டுக்கும் பயணச்சீட்டுக்களை அவர்களுக்காக வாங்கலாம். அதாவது இந்தியாவில் வாழ்வோர் அவர்களுக்குரிய பயணச்சீட்டினை வாங்கலாம். உதாரணமாக லண்டனிலிருந்து நியூயார்க்குக்கு உள்நாட்டு/வெளிநாட்டு விமானங்கள் மூலம் பயணம் செய்வதற்கு இந்தியாவிலிருந்தே பணச்சீட்டுகள் வாங்கலாம்.

 

27. இந்தியாவில் வாழ்வோர் அந்நியப்பணத்தாள்கள் மதிப்புகளில் இந்தியாவில் கணக்கு தொடங்கலாமா ?

இந்தியாவில் வாழ்வோர் அந்நியப்பணத்தாள் கணக்குகளைப் பராமரிக்கப் பின் வரும் இரண்டு திட்டங்களின் வழி அனுமதிக்கப் படுகின்றனர்.

அ) EEFC கணக்குகள்

ஒரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடம் அந்நியப்பணககணக்கில் அதாவது EEFC கணக்கில் வெளிநாட்டிலிருந்து பெறப்படும் அந்நியப்பணம் செலுத்துதல்களில் 50% வரை வைத்துக்கொள்ளலாம். EEFC கணக்கில் உள்ள நிதிகளை நடப்புக்கணக்குப்பரிமாற்றங்களுக்கும், மேலும் இந்திய அரசு/ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் அவ்வப்போது வெளியிடப்படும் விதிகள/ஒழுங்குமுறைகள்/வெளியீடுகள்/வழிகாட்டுநெறிகள் ஆகியவற்றில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள மூலதனக்கணக்கு பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்தலாம்.

ஆ) RFC கணக்குகள்

இந்தியாவுக்குத்திரும்பும் இந்தியர்கள் அதாவது முன்னர் வெளிநாட்டில் வாழ்ந்தவர்கள இப்போது இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு வருபவர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடம், தங்கள் அந்நியப்பணச்சொத்துகளை வைத்துக்கொள்ள இந்தியாவில் வாழ்வோர் அந்நியப்பணக்கணக்கினை (RFC) தொடங்கி வைத்திருந்து பராமரிக்கலாம். வெளிநாட்டில் இருந்து திரும்பும்போது வெளிநாட்டில் உள்ள சொத்துகளை அந்தக்கணக்கில் வரவு வைக்கலாம். (i) அந்நியச்செலாவணி மேலாண்மைச்சட்ட பிரிவு 6 உட்பிரிவு (4) இன்படி பரிசாகவோ பரம்பரை உரிமையாகவோ ஒரு நபரிடமிருந்து பெறப்பட்டது (ii) அந்தச்சட்டத்தின் துணைவிதி (c) பிரிவு 9 இல் குறிப்பிட்டுள்ளபடியோ அல்லது அங்கிருந்து பரிசாகவோ அல்லது பரம்பரையுரிமையாகவோ பெறப்பட்ட சொத்துகளையும் இந்தக்கணக்கில் வரவு வைக்கலாம்.

இந்த RFC கணக்கில் உள்ள நிதிகள் அந்நியச்செலாவணிப் பயன்படுத்துதலைப்பற்றிய, வெளிநாட்டில் முதலீடு செய்வதற்குரிய தடை உட்பட எந்தத்தடையும் இல்லாதது. இந்த வசதி, அத்தகைய கணக்குகளில் செலுத்தப்படும் நிதிகள் சில குறிப்பிட்ட வகை நிதியிலிருந்து / கணக்குகளிலிருந்து பெறப்படாதவரை இந்தியாவில் வாழ்வோருக்கும் உண்டு.

இ) RFC (உள்நாட்டு) கணக்கு

இந்தியாவில் வாழும் ஒருவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரிடம் பின் வரும் முறைகளில் பெறப்பட்ட வெளிநாட்டுப்பணத்திலிருந்து ஒரு RFC கணக்கினைத் தொடங்கி வைத்திருந்து பராமரிக்கலாம். வெளிநாட்டில் செய்யப்பட்ட சேவைக்குரிய கட்டணங்கள், மதிப்பூதியம், பரிசு, இந்தியாவில் வாழாத ஒரு நபரிடமிருந்து சட்டபூர்வமான உதவிக்காக பெறப்பட்ட தொகை போன்றவை அன்னிய நாட்டுப்பணத்தாள்கள், வங்கி நோட்டுகள், பயணிகள் காசோலை ஆகிய வடிவில் பெறப்பட்டவை, வெளிநாட்டுக்கு ஏற்றுமதிசெயப்பட்ட பொருள்களிலிருந்து பெறப்பட்ட பணம், சேவைகட்டணம், உரிமைத்தோகை, பதிப்பூதியம் போன்றவை, நெருங்கிய உறவின்ர்களிடமிருந்து பெறப்பட்ட பரிசுகள், (நிறுமங்கள் சட்டத்தில் விளக்கப்பட்டவை) ஆகியன இந்தியாவில் தங்கியுள்ள நபர்களால் சாதாரண வங்கி வழிமுறைகளில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட அந்நியச்செலாவணியை, வங்கிக்கணக்குகள் தொடங்கவும் வரவு வைக்கவும் பயன்படுத்தலாம்.

 

28. இந்தியாவில் வாழும் ஒருவர் இந்தியாவுக்கு வெளியே சொத்துகள் வைத்துக்கொள்ளலாமா ?

வெளிநாட்டுப் பணம், பத்திரங்கள், சொத்து ஆகியன ஒருவர் வெளிநாட்டில் வாழ்ந்தபோது வைத்திருந்து, அல்லது அவருக்குச் சொந்தமானது, அல்லது வெளிநாட்டில் வாழும்போது பரம்பரையுரிமையாகப் பெறப்பட்டது எனில் ஒருவர் அ.செ.மே.ச். 1999 பிரிவு (6) உட்பிரிவு (4) இன்படி இந்தியாவில் வாழும் ஒருவர் அந்நியப்பணத்தில், அந்நியப் பத்திரத்தில் அல்லது எந்த ஒரு அசையாச்செத்திலும் வைத்திருக்கலாம்; சொந்தமாக்கிக் கொள்ளலாம் அல்லது மாற்றித்தரலாம் (அமெரிக்க டாலர் 25,000 எளிமையாக்கப்பட்ட செலுத்துதல் வசதியைப்பற்றி பின்வரும் விளக்கத்தினை தயவு செய்து பார்க்கவும்).

 

II. எளிமையாக்கப்பட்ட செலுத்துதல் திட்டம் அமெரிக்க டாலர் 25,000.

 

29. எளிமையாக்கப்பட்ட செலுத்துதல் திட்டம் அமெரிக்க டாலர் 25,000 என்பது என்ன ?

இந்தியாவில் வாழும் அனைத்துத்தனிநபர்களுக்கும் உரிய ஒரு புதிய திட்டம் இது. இதன் கீழ் அனுமதிக்கப்பட்ட எந்த நடப்பு அல்லது மூலதனக் கணக்குகளுக்கும் ஒரு நாட்காட்டி ஆண்டில் தனித்தனியே அல்லது இரண்டிலும் இணைந்தே அமெரிக்க டாலர் 25,000/- வரை தடையின்றிச்செலுத்தலாம்.

 

30. இந்த எளிமையான செலுத்துதல் திட்டத்து வசதிக்கு உரியவர்கள் யார் ?

இந்த வசதி இந்தியாவில் வாழும் நனிநபர்களுக்கு மட்டுமே உரியது.

 

31. இந்த வசதிக்கு கால இடைவெளி ஏதேனும் உள்ளதா ?

இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் வாழும் தனிநபர்கள் ஒரு நாட்காட்டி ஆண்டில் ஒரு முறை பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

32. இந்தத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நடப்புக்கணக்குப் பரிமாற்றங்களுக்கோ அல்லது மூலதனக் கணக்குப்பரிமாற்றங்களுக்கோ அல்லது இரண்டும் இணைந்த பரிமாற்றங்களுக்கோ பணம் செலுத்துவதற்கு வசதி உள்ளதா?

இந்தத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட நடப்புக்கணக்குப் பரிமாற்றங்களுக்கோ அல்லது மூலதனக் கணக்குப்பரிமாற்றங்களுக்கோ அல்லது இரண்டும் இணைந்த பரிமாற்றங்களுக்கோ பணம் செலுத்துவதற்கு வசதி உள்ளது. இந்திய அரசு (அட்டவணை 11) அந்நியச்செலாவணி மேலாண்மை (நடப்புக்கணக்குப் ப்ரிமாற்றங்கள்) விதிகள் 2000 இல் சிறப்பாகத் தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்கு இந்த வசதி இல்லை.

 

33. இந்தியாவில் வாழ்வோர் வெளிநாட்டில் அசையாச்சொத்துகள் அல்லது மற்ற சொத்துகளை வாங்க இந்த வசதியைப்பயன்படுத்திக் கொள்ளலாமா ?

ஆம். தனிநபர்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் அசையாச்சொத்துகள், பங்குகள் மற்றும் பிற சொத்துகளை வாங்குவதற்கு இந்த வசதியை பயன் படுத்திக் கொள்ளலாம்.

 

34. இந்தத்திட்டத்தின் கீழ் பணம் செலுத்துவதற்குத் தனிநபர்கள் அந்நியப் பணக்கணக்கினைத் தொடங்கி பராமரிக்கலாமா?

இந்தத்திட்டத்தின் கீழ் பணம் செலுத்துவதற்குத் தனிநபர்கள் வெளி நாட்டில் அந்நியப் பணக்கணக்கினைத் தொடங்கி வைத்திருந்து பராமரிக்கலாம். இந்தக் கணக்கினை இந்தத்திட்டத்தின் தொடர்பான அல்லது இந்தத்திட்டத்தினால் உருவாகும் எந்தப்பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

35. அந்நியச்செலாவணி மேலாண்மை (நடப்புக்கணக்குப் பரிமாற்றங்கள்) விதிகள் 2000 இல் உள்ளடங்கிய தனிப்பட்ட பயணம் / வணிகப்பயணம், பரிசு, நன்கொடை, கல்வி, மருத்துவச்சிகிச்சை, போன்றவை தொடர்பாக உள்ள வசதிகளின் மீது இந்தத்திட்டத்தின் தாக்கம் என்ன ?

அந்நியச்செலாவணி மேலாண்மை (நடப்புக்கணக்குப் பரிமாற்றங்கள்) விதிகள் 2000 இன் கீழ் ஏற்கனவே உள்ள வசதிகளுடன கூடுதலாக இந்தத்திட்டத்தில் வசதி உள்ளது.

 

36. தனிநபர்கள் இந்தத்திட்டத்தின் கீழ் எந்த நாட்டுக்கும் பணம் செலுத்தலாமா ?

பூட்டான், நேப்பாளம், மொரீசியஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் செலுத்த முடியாது. நிதிச்செயல்பாட்டுச் செயற்படை (நி.செ.செ.ப.)யினால் அவ்வப்போது ஒத்துழையாத நாடுகள் என அடையாளம் காணப்படும் நாடுகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் செலுத்தும் வசதி இந்தத்திட்டத்தில் இல்லை.

அத்தகைய நாடுகள்/ பகுதிகளின் இப்போதைய பட்டியலுக்கு www.fatf-gafi.org.என்னும் இணையதளத்தினைப் பார்க்கவும். மேலும், ஆபத்தினை விளைவிக்கக்கூடியவர்கள் அல்லது பயங்கரவாதச் செயல்கள் செய்யக்கூடியவர்கள் என்று ரிசர்வ் வங்கியினால் கண்டறியப்பட்ட தனிநபர்களும், அமைப்புகளும் இந்தத்திட்டத்தின் கீழ் பணம் செலுத்துதல் முடியாது.

 

37. பணம் செலுத்துவோர் செய்ய வேண்டியவை எவை ?

இந்தத்திட்டத்தின் கீழ் அனைத்துப்பணம் செலுத்துதல்களுக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட வணிகரின் கிளையினை ஒருவர் நியமிக்க வேண்டும். அவர் இதற்கென உள்ள விண்ணப்ப வரைவடிவத்தில் எந்த நோக்கத்துக்காகப் பணம் செலுத்தப்படுகிறது என்பதையும் இந்தப்பணம் தனக்குரியது தான் என்பதையும் இந்தத் திட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட எந்த நோக்கத்துக்காகவும் இது பயன்படுத்தப்படமாட்டாது என்றும் உறுதி யளிக்க வேண்டும்.

 

38. அமெரிக்க டாலர் 25,000ம முதலீடு செய்த ஓராண்டுக்குள் மதிப்பில் உயருமானால் ஒருவர் அந்த லாபத்தினைப்பதிவுசெய்து வெளிநாட்டில் மீண்டும் முதலீடு செய்யலாமா ?

முதலீட்டாளர் லாபத்தினையோ இழப்பீட்டினையோ பதிவுசெய்து மீண்டும் வெளிநாட்டில் தடையின்றி முதலீடு செய்யலாம். வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட நிதிகளைத் திரும்பவும் தாய்நாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

 

39. ஒரு நாட்காட்டி ஆண்டில் அனுப்பப்பட்டு தாய்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட தொகையினை மீண்டும் இந்த வசதிக்கும் பயன்படுத்தலாமா ?

ஒரு நாட்காட்டி ஆண்டில் ஒரு முறை இந்தச்செலுத்தலின வழியாக அமெரிக்க டாலர் 25,000 வரை செய்து விட்டது எனில், அந்த முதலீடுகள் தாய் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டாலும் கூட, இந்தத்திட்டத்தின் வழியே அவர் மீண்டும் பணம் செலுத்துதல் முடியாது.

 

40. அமெரிக்க டாலர்களில மட்டும்தான் பணம் செலுத்த முடியுமா?

ஒரு நாட்காட்டி ஆண்டில், அமெரிக்க டாலர் 25,000க்கு ஈடான எந்த நாட்டுப்பணத்தையும் செலுத்தலாம்.

 

41. சென்று ஆண்டு இந்தியாவில் வாழும் முதலீட்டாளர்கள், இந்தியக்கம்பெனிகளில் குறைந்த பட்சம் 10% பங்குகளைவைத்துள்ள கடல் கடந்த நாடுகளின் பட்டியலிடப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யலாம். அந்த நிலை இப்போதும் உள்ளதா ?

பட்டியலிலுள்ள இந்தியக்கம்பெனிகளில் குறைந்த பட்சம் 10% பங்குகளை பெற்றுள்ள கடல்கடந்த நாடுகளின் கம்பெனிகளின் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என்பது நம்முடைய A.P.(DIR தொடர்) சுற்றறிக்கை எண். 66 ஐனவரி 13, 2000 நாளிட்டது ஒரு கூடுதல் வசதியாகத்தொடர்கிறது. இப்போதுள்ள எளிமைப்படுத்தப்பட்ட செலுத்துதல் திட்டத்தில் அத்தகைய வரையறை எதுவும் செல்லப்படவில்லை.

 

III. சிறப்புத்திட்டங்களை வழங்கும் நிதி இடையீட்டாளர்க்குரிய வழிகாட்டு நெறிகள் இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு

42. வாடிக்கையாளர்களுக்குரிய கடல்கடந்த நாடுகளில் முதலீடு செய்யும் திட்டத்துக்காக இடையீட்டாளர்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டுமா ?

இந்தியாவில் இயக்கவழி இல்லாத வங்கிகள் தங்களுடைய வெளிநாட்டு/ கடல்கடந்த கிளைகளுக்கோ அல்லது முகவர்களுக்கோ வைப்புத் தொகையைப்பெற விரும்பினாலோ அல்லது கடல்கடந்த நாடுகளின பரஸ்பர நிதிக்கு முகவராக இருக்க விரும்பினாலோ அவை ரிசர்வ் வங்கியிடமிருந்து முன் அனுமதியைப்பெற வேண்டும்.

 

43. ஒருவர் எந்தவகை/தரத்தில் அல்லது கடன் அல்லது பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு வரையறை ஏதும் உள்ளனவா?

எளிமைப்படுத்தப்பட்ட செலுத்துதல் திட்டம் அமெரிக்க டாலர் 25,000இன் கீழ் ஒருவர் முதலீடு செய்வதற்கு தரவிகிதங்கள் அல்லது வழிகாட்டு நெறிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும், ஒரு ஆண் அல்லது பெண் இத்தகைய திட்டத்தில் முதலீடு செய்யும் முன்னர் தேவையான எச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றனர்.

 

44. கடல்கடந்த நாடுகளின் வங்கிக்கிளைகளில் அனுமதிக்கப்படும் எனில் இந்தியாவில் வாழும் மைனர்கள் அன்னியப் பணக்கணக்குகளைத்தொடங்கி, வைத்திருந்து பராமரிக்கலாமா ?

பணம் செலுத்தும் நபர் ஒரு மைனர் எனில் வங்கிகள் உறுதிப்பத்திரத்தின் செயலாக்கத்தில் சட்டபூர்வமான நிலை பற்றி வங்கிகள் தேவைப்படும் நடவடிக்கையை எடுக்கலாம்.

 

45. அத்தகைய வைப்புநிதியைப் பினையமாகக்கொண்டு இந்திய ரூபாய் அல்லது அன்னிய பணக்கடன் அட்டைகள் அனுமதிக்கப்படுமா ?

இல்லை. இந்த திட்டத்தின் வழியில் அந்த வைப்புத்தொகையை பிணையமாகக் கொண்டு கடன் அட்டை வசதி வழங்கப்படாது.

 

46. இந்தியாவில் வாழ்வோருக்கு இந்தியாவில் வங்கியாளர்கள் இத்தகைய அந்நியப்பணக்கணக்கினைத் தொடங்க முடியுமா ?

இல்லை. இந்தியாவில் உள்ள வங்கிகள் இந்தியாவில் வாழ்வோருக்கு அந்நியப்பணக் கணக்குகளைத் தொடங்க முடியாது.

 

47. இந்தியாவில் உள்ள கடலகடந்த நாட்டின் வங்கிப்பிரிவு, இந்தியாவில் வாழ்வோர் இந்தத்திட்டத்தில் அந்நியப்பணக்கணக்கினைத் தொடங்குவதற்கு, வெளிநாட்டில் உள்ள வங்கிக்கிளையைப் போலவே கருதப்படுமா ?

இல்லை. இந்தத்திட்டத்தின் நோக்கத்துக்கு இந்தியாவில் உள்ள ஒரு OBU இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வங்கிக் கிளையைப்போலக் கருதப்படாது.

 

 

பொதுத்தகவல்

மேலும் விளக்கங்களுக்கு அந்நியச்செலாவணியைக் கையாளுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியையோ அல்லது ரிசர்வ் வங்கியின் அந்நியச்செலாவணித்துறையின் வட்டார அலுவலகங்களையோ அணுகவும்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்